/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரயிலில் வந்த 10 சிறுவர்கள் பங்கார்பேட்டையில் மீட்பு
/
ரயிலில் வந்த 10 சிறுவர்கள் பங்கார்பேட்டையில் மீட்பு
ரயிலில் வந்த 10 சிறுவர்கள் பங்கார்பேட்டையில் மீட்பு
ரயிலில் வந்த 10 சிறுவர்கள் பங்கார்பேட்டையில் மீட்பு
ADDED : ஏப் 26, 2025 08:28 AM
பங்கார்பேட்டை : எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த அசாம், பீஹார் மாநிலங்களை சேர்ந்த 10 சிறுவர்களை, பங்கார்பேட்டையில் ரயில்வே போலீசார் மீட்டனர்.
குவாஹட்டி - கே.எஸ்.ஆர்., பெங்களூரு இடையே இயங்கும் காசிரங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே போலீசார் ஒவ்வொரு பெட்டிகளையும் புதன்கிழமை சோதனை செய்தனர்.
ஒருபெட்டியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 10 முதல் 15 வயதுக்கு உட்பட்ட 10 சிறுவர்கள் இருந்தனர். அவர்களுடன் பெற்றோரோ உறவினர்களோ இல்லை. அவர்களிடம் விசாரித்தபோது, அசாம், பீஹார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மாலுாரின் மதரசாவில் சேர்ப்பதற்காக தாங்கள் அழைத்து வரப்பட்டதாக தெரிவித்தனர்.
அவர்களை அழைத்து வந்த நபர், மாலுாருக்கு டிக்கெட் எடுக்க சென்றிருப்பதாக கூறினர். ஆனால் அவர்களை தேடி யாரும் வரவில்லை. இதையடுத்து அவர்களை ரயிலில் இருந்து இறக்கிய போலீசார், தங்கவயல் மஸ்கம் பகுதியில் உள்ள சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
சிறுவர்கள் கடத்தி வரப்பட்டனரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து கோலார் மாவட்ட சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரியும், தங்கவயல் சிறுவர் காப்பகத்தின் பொறுப்பு அதிகாரியுமான நாகரத்னா நேற்று கூறுகையில், “ரயிலில் வந்த சிறுவர்களிடம் மொழி பிரச்னை காரணமாக போதுமான தகவல்களை பெற முடியவில்லை. விசாரணைக்கு பிறகு, அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவர். அவர்களை தேடி இதுவரை யாரும் வரவில்லை,” என்றார்.

