sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

கர்நாடகாவில் 10 மணி நேரம் வேலை? தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு!

/

கர்நாடகாவில் 10 மணி நேரம் வேலை? தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு!

கர்நாடகாவில் 10 மணி நேரம் வேலை? தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு!

கர்நாடகாவில் 10 மணி நேரம் வேலை? தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு!


ADDED : ஜூன் 19, 2025 03:30 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 03:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடகாவில் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் தினசரி வேலை நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்துவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

ஆந்திராவில் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளின் பணியாற்றும் ஊழியர்களின் தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுபோன்று கர்நாடகாவிலும் தினசரி வேலை நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்துவது குறித்து, தொழிலாளர் நலத்துறைச் செயலர் ரோகிணி சிந்துாரி, பல்வேறு தொழிற்சங்கத்தினர், அமைப்பினருடன் பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

ரோகிணி சிந்துாரி கூறுகையில், ''1961ம் ஆண்டு சட்டபிரிவு 7ன் படி, வேலை நேரம் ஒரு நாளைக்கு 9 மணி நேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். தற்போது மாநிலத்தில் 8 மணி நேரம் மட்டுமே பணி நேரமாக உள்ளது,'' என்றார்.

2 நாள் லீவு


தனியார் நிறுவனங்களில் 25 வயதுக்கு உட்பட்டவர்களே, 90 சதவீதம் வேலை செய்கின்றனர். நீண்ட வேலையால் மன அழுத்தத்திற்கு ஆளாவர்.

குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடியாது. நேரத்தை அதிகரிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் கேட்டுக் கொண்டனர்.

வாரத்தில் இரண்டு நாட்கள், தன் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கும் நிறுவனங்கள், ஊழியர்கள் விரும்பினால் தினமும் 10 மணி நேரம் வேலை செய்ய அனுமதிக்கட்டும் என்றும் கூறினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

சட்ட அறிவு


இதுகுறித்து தொழிலாளர் நல அமைச்சர் சந்தோஷ் லாட் அளித்த பேட்டி:

தொழிலாளர் நலத் துறை செயலர் ரோகிணி சிந்துாரி, பல்வேறு தொழிற்சங்கத்தினருடன் நடத்திய ஆலோசனை பற்றி, என்னிடம் போதுமான தகவல் இல்லை. தினசரி வேலை நேரத்தை உயர்த்த வேண்டும் என்று, கர்நாடக அரசு முன்மொழியவில்லை.

மத்திய அரசு தான் முன்மொழிந்துள்ளது. மத்திய குழுவினர், தலைமை செயலர் ஷாலினியை சந்தித்துப் பேசினர்.

அவர் கூறியதன்படி தொழிற்சங்கத்தினருடன் கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. அம்பேத்கர் 14 மணி நேர வேலை நேரத்தை, எட்டு மணி நேரமாக குறைத்தார். மத்திய அரசிடம் இருந்து உத்தரவு வந்தால், அதை பின்பற்றாமல் இருக்க முடியாது.

வேலை நேரத்தை உயர்த்துவது பற்றி, மற்ற மாநிலங்களுடன் ஆலோசிப்போம். விரிவான அறிக்கை தயாரித்து முதல்வரிடம் சமர்ப்பிப்போம்.

அமைச்சரவை கூட்டத்திலும் விவாதிப்போம். தொழிற்சங்கத்தினருக்கு சட்ட அறிவு அதிகம். அவர்களுடன் நானும் ஒரு முறை ஆலோசிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us