sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

ரவுடி சிவகுமார் கொலையில் தலைமறைவான எம்.எல்.ஏ., ஆதரவாளர் மீது 16 வழக்குகள் 

/

ரவுடி சிவகுமார் கொலையில் தலைமறைவான எம்.எல்.ஏ., ஆதரவாளர் மீது 16 வழக்குகள் 

ரவுடி சிவகுமார் கொலையில் தலைமறைவான எம்.எல்.ஏ., ஆதரவாளர் மீது 16 வழக்குகள் 

ரவுடி சிவகுமார் கொலையில் தலைமறைவான எம்.எல்.ஏ., ஆதரவாளர் மீது 16 வழக்குகள் 


ADDED : ஜூலை 21, 2025 07:17 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரதிநகர் : ரவுடி சிவகுமார் கொலை வழக்கில் தலைமறைவாக இருக்கும், எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ் ஆதரவாளர் ஜெகதீஷ் மீது 16 வழக்குகள் உள்ள நிலையில், அவரது பெயர் ரவுடி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது, புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு பாரதிநகரை சேர்ந்த ரவுடி சிவகுமார், 44, கடந்த 15ம் தேதி கொலை செய்யப்பட்டார். கே.ஆர்.புரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ், அவரது தீவிர ஆதரவாளர் ஜெகதீஷ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவானது.

இவ்வழக்கில் 5 பேர் கைதாகி இருக்கும் நிலையில், பைரதி பசவராஜும் போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார். வழக்கின் முதல் குற்றவாளியான ஜெகதீஷ் தலைமறைவாக உள்ளார். அவர் தமிழகத்தில் இருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில், அங்கு சென்று தனிப்படை போலீசார் தேடுகின்றனர்.

இந்நிலையில் ஜெகதீஷ் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 1999ம் ஆண்டு முதல் அவர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்து உள்ளார். கொலை, ஆள்கடத்தல், கொலை முயற்சி என அவர் மீது 16 வழக்குகள் உள்ளன. ஹென்னுார் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலிலும் ஜெகதீஷ் பெயர் இருந்தது. ஆனால் கடந்த 2022ல் ரவுடி பட்டியலில் இருந்து, அவரது பெயர் நீக்கப்பட்டது.

பைரதி பசவராஜ் அந்த நேரத்தில் அமைச்சராக இருந்ததால், அவர் கொடுத்த அழுத்தத்தால், ஜெகதீஷ் பெயர் ரவுடி பட்டியலில் இருந்து கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர் பெயரை, போலீசார் எப்படி ரவுடி பட்டியலில் இருந்து நீக்கினர் என்ற கேள்வி எழுந்து, புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.






      Dinamalar
      Follow us