sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

19 வயது இளம்பெண், இளைஞர் மாரடைப்பால் மரணம்

/

19 வயது இளம்பெண், இளைஞர் மாரடைப்பால் மரணம்

19 வயது இளம்பெண், இளைஞர் மாரடைப்பால் மரணம்

19 வயது இளம்பெண், இளைஞர் மாரடைப்பால் மரணம்


ADDED : மே 22, 2025 11:15 PM

Google News

ADDED : மே 22, 2025 11:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூரில் வாலிபரும், ஹாசனில் இளம் பெண்ணும் மாரடைப்பால் உயிரிழந்தனர்.

இளம் தலைமுறையினர், மாரடைப்பால் இறக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்று ஹாசனிலும், பெங்களூரிலும் 19 வயதுள்ள இளம் பெண்ணும், வாலிபரும் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர்.

ஹாசன் மாவட்டம், ஹொளேநரசிபுரா டவுன் மடிவாளா பிளாக்கில் வசிப்பவர்கள் வெங்கடேஷ் - பூர்ணிமா. இவர்களின் மகள் சந்தியா, 19. டிப்ளமோ இறுதி ஆண்டு முடித்துள்ளார். நேற்று காலையில் குளிப்பதற்கு குளியல் அறைக்கு சென்றார். அறை வாசலில் மயங்கி விழுந்தார்.

இதை பார்த்த பெற்றோர், அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

 இதுபோன்று ஹாசன் மாவட்டம், அரகலகூடு கடனுார் கிராமத்தை சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணா - அனுசுயா. இவர்களின் மகன் அபிஷேக், 19. பெங்களூரு பசவேஸ்வரநகரில் வசித்து வந்த இவர், கேப் ஓட்டுநராக இருந்தார்.

நேற்று காலை வாடிக்கையாளர்களுக்காக, காரை சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு, வெளியே நின்றிருந்தார். திடீரென மயங்கி விழுந்த அவரை, அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us