ADDED : ஏப் 26, 2026 11:50 PM

அ நிறம் | அளவு
தொட்டபல்லாபூர்: பைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில், வங்கி ஊழியர்கள் 2 பேர் இறந்தனர்.
மாண்டியாவின் பாண்டவபுரா தாலுகா ஹரலுகுப்பே கிராமத்தை சேர்ந்தவர்கள் நாகேஷ், 26, மனோஜ், 24. இவர்கள் இருவரும் பெங்களூரு ரூரல் தொட்டபல்லாபூரில் தனியார் வங்கியில் ஊழியர்களாக வேலை செய்தனர்.
வாடகை வீட்டில் வசித்தனர். நேற்று முன்தினம் இரவு உணவு வாங்க, ஹோட்டலுக்கு பைக்கில் சென்றனர். அந்த வழியாக வந்த டிராக்டர், பைக் மீது மோதியது.
துாக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். விபத்து நடந்த இடத்தில் தெருவிளக்கு இல்லாமல் இருட்டாக இருந்ததே, இருவரின் உயிர் பறிபோக காரணம் என்று, அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு கூறி உள்ளனர்.
