sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கோவில் குளத்தில் 2 சிறுவர்கள் பலி

 கோவில் குளத்தில் 2 சிறுவர்கள் பலி

 கோவில் குளத்தில் 2 சிறுவர்கள் பலி


ADDED : மே 03, 2026 11:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 03, 2026 11:34 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெலகாவி: பெலகாவியில் கோவில் குளத்தில் குளிக்க சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்தனர்.

பெலகாவி நகரின் சிவாஜி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் சிவம் பரசுராம கண்டிகர், 7, பரசுராம் நீலஜாகர், 11. கோடை வெப்பம் அதிகமாக இருந்ததால், நேற்று காலை இருவரும் பிரசித்தி பெற்ற கபிலேஷ்வர் கோவிலுக்கு சொந்தமான குளத்தில் குளிக்க சென்றனர்.

குளித்து கொண்டிருந்தவர்கள், ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். இதனால் இருவரும் தத்தளித்தனர். தொலைவில் இருந்து பார்த்த சிலர், அவர்களை காப்பாற்ற முயன்றனர். அவர்கள் வருவதற்குள் இருவரும் நீரில் மூழ்கினர்.

உடனடியாக தீயணைப்பு படையினருக்கும், கடேபஜார் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்பு படையினர், இரு சிறுவர்களின் சடலத்தை மீட்டனர்.

கபிலேஷ்வர் கோவில் குளம் பல ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படவில்லை. குளத்தை சுற்றிலும் பாதுகாப்பு வேலியோ அல்லது எச்சரிக்கை பலகையோ இல்லாததே இத்தகைய சம்பவங்களுக்கு வழிவகுக்கிறது என்று அப்பகுதியினர் குற்றம்சாட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us