/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தவிக்க விட்டு சென்ற தாய் பசியால் 2 புலி குட்டி மரணம்
/
தவிக்க விட்டு சென்ற தாய் பசியால் 2 புலி குட்டி மரணம்
தவிக்க விட்டு சென்ற தாய் பசியால் 2 புலி குட்டி மரணம்
தவிக்க விட்டு சென்ற தாய் பசியால் 2 புலி குட்டி மரணம்
ADDED : ஆக 13, 2025 11:00 PM

சாம்ராஜ் நகர்: கர்நாடகாவின், சாம்ராஜ் நகர் மாவட்டம், மலை மஹாதேஸ்வரா மலை வனவிலங்கு சரணாலயத்தில், கடந்த ஜூனில் தாய் புலி, அதன் நான்கு குட்டிகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இதே மாவட்டத்தில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயத்தில், வனத்துறை ஊழியர்கள், கடந்த 11ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஹொலேமுரதட்டி அருகில், ஒரு ஆண் புலி குட்டி இறந்து கிடந்தது. மறுநாள் காலை அதே பகுதியில் பெண் புலி குட்டி இறந்து கிடந்தது.
இது குறித்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பிரேத பரிசோதனையில், பிறந்து 10 நாட்களே ஆன குட்டிகளை, தாய் புலி தவிக்க விட்டு சென்றுள்ளது. இதனால் உணவு, தண்ணீரின்றி பசியால் குட்டிகள் உயிரிழந்துள்ளன.
இதன் உடலில் வேறு காயங்கள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
ஏற்கனவே, ஐந்து புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள், பசியால் இரு புலி குட்டிகள் இறந்தது, விலங்குகள் ஆர்வலர்களை வேதனையில் தள்ளியுள்ளது.