ADDED : மார் 05, 2026 05:19 AM
அ நிறம் | அளவு
கொப்பால்: கொப்பால் மாவட்டம், கங்காவதி தாலுகாவின், சனாபுரா கிராமத்தின், காந்தி நகரில் வசிக்கும் ஐந்து இளைஞர்கள், நேற்று மதியம் ஹோலி கொண்டாடினர்.
அதன்பின் உணவு கட்டிக்கொண்டு, கிராமத்தில் உள்ள நீர் வீழ்ச்சிக்கு சென்றனர். சிறிது நேரம் நீரில் நீந்தி விளையாடினர்.
அதன்பின் அனைவரும் சேர்ந்து உணவருந்தினர். பாத்திரங்களை கழுவ சுரேஷ், 18, அபிஷேக், 18, சென்ற போது கால் தவறி நீரில் விழுந்தனர்.
ஆழமான பகுதி என்பதால், இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
