sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

'கூலி' பார்க்க சென்ற 2 வாலிபர்கள் பலி

/

'கூலி' பார்க்க சென்ற 2 வாலிபர்கள் பலி

'கூலி' பார்க்க சென்ற 2 வாலிபர்கள் பலி

'கூலி' பார்க்க சென்ற 2 வாலிபர்கள் பலி


ADDED : ஆக 18, 2025 03:19 AM

Google News

ADDED : ஆக 18, 2025 03:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹாசன் : கூலி திரைப்படம் பார்க்க, அதி வேகமாக காரில் செல்லும் போது, விபத்து ஏற்பட்டதில் 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.

ஹாசன் மாவட்டம், அரகலகூடு தாலுகாவின், கொனநுார் கிராமத்தில் வசித்தவர் தர்ஷன், 25. இவர் பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை செய்தார்.

இவரது நண்பர் ரங்கநாத பிரசாத், 22. இவர்கள் ரஜினி நடித்த, கூலி திரைப்படத்தை பார்க்க விரும்பினர். இதற்காக மைசூரில் திரையரங்கு ஒன்றில், ஆன்லைன் வழியாக டிக்கெட் முன் பதிவு செய்திருந்தனர்.

நேற்று காலை 8:00 மணி காட்சிக்கு, திரையரங்குக்கு செல்ல வேண்டியிருந்தது. எனவே கிராமத்தில் இருந்து, தர்ஷன், தன் சகோதரர் மற்றும் நண்பருடன், நேற்று அதிகாலையில் காரில் புறப்பட்டார். நேரமாகிவிடும் என்பதால், 110 கி.மீ., வேகத்தில் சென்றனர்.

ஹாசன் மாவட்டம், அரகலகூடு தாலுகாவின், பசவாபட்டணா அருகில் செல்லும் போது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை டிவைடரில் மோதியது. இதில் காரின் முன் பகுதி நொறுங்கியது. தர்ஷன், ரங்கநாத பிரசாத் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தர்ஷனின் சகோதரர் அதிர் ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

தகவலறிந்து அங்கு வந்த கோனநுார் போலீசார், காரில் இருந்த உடல்களை மீட்டனர். அதிவேகமே விபத்துக்கு காரணம் என, முதற்கட்ட விசார ணையில் தெரிந்தது.






      Dinamalar
      Follow us