sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு '20 ஆண்டு'

/

சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு '20 ஆண்டு'

சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு '20 ஆண்டு'

சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு '20 ஆண்டு'


ADDED : செப் 11, 2025 07:49 AM

Google News

ADDED : செப் 11, 2025 07:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாம்ராஜ்நகர் : முகநுால் மூலம் அறிமுகமான சிறுமியை, கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுாரை சேர்ந்தவர் நாகேந்திரா, 28. இவருக்கு இரண்டு ஆண்டுக்கு முன், முகநுால் மூலம் 16 வயது சிறுமி அறிமுகமானார். இருவரும் நேரில் சந்தித்து கொண்டனர். சிறுமியை காதலிப்பதாக நாகேந்திரா நம்ப வைத்தார்.

பேச வேண்டும் என கூறி, சிறுமியை வரவழைத்து கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து, சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி, ஹனுார் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவானது. நாகேந்திராவை கைது செய்த போலீசார், ஹனுாரின், கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

நீதிமன்ற விசாரணையில், நாகேந்திராவின் குற்றம் உறுதியானதால், அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, 25,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று முன் தினம் நீதிபதி கிருஷ்ணா தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும்படி, சட்டசேவைகள் ஆணையத்துக்கு, நீதிபதி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us