/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
6 ஆண்டில் 22,000 வழக்குகள் நீதிபதி நாகபிரசன்னா சாதனை
/
6 ஆண்டில் 22,000 வழக்குகள் நீதிபதி நாகபிரசன்னா சாதனை
6 ஆண்டில் 22,000 வழக்குகள் நீதிபதி நாகபிரசன்னா சாதனை
6 ஆண்டில் 22,000 வழக்குகள் நீதிபதி நாகபிரசன்னா சாதனை
ADDED : நவ 28, 2025 05:48 AM

பெங்களூரு: கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா, அரிய சாதனை செய்துள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளில் 22,000 வழக்குகளை முடித்து வைத்துள்ளார்.
கடந்த 2019 நவம்பர் 26ம் தேதி, கர்நாட க உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நாகபிரசன்னா பொறுப்பேற்றார். 2021 செப்டம்பர் 8ல், நிரந்தர நீதிபதியானார். அவர் பதவிக்கு வந்து, நேற்று முன் தினத்துடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைந்தன. உயர் நீதிமன்ற நீதிபதியாக ஆறு ஆண்டுகள் நிறைவு செய்த முதல் நீதிபதி இவரே என்பது குறிப்பிடத்தக்கது. நீதிபதி நாக பிரசன்னாவின் பதவி காலம் 2033 வரை உள்ளது.
உயர் நீதிமன்றத்தின் மற்ற நீதிபதிகள், ஆண்டுக்கு 750 வழக்குகளை முடிப்பர். ஆனால் நீதிபதி நாக பிரசன்னா, ஆறு ஆண்டுகளில் 21,924 வழக்குகளை முடித்து வைத்துள்ளார்.
இது அரிய சாதனையாகும். பல்வேறு முக்கியமான வழக்குகள் சம்பந்தப்பட்ட தீர்ப்புகளும் அடங்கும். பெங்களூரு, தார்வாட், கலபுரகி உயர்நீதிமன்ற கிளைகளிலும் அவர் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு அளித்துள்ளார். கடந்த 2024ல், ஒரே நாளில் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் 600 வழக்குகளை விசாரித்தார். மாலை 4:00 மணி வரை விசாரணை நடத்தி முடித்தார்.
நடப்பாண்டு மார்ச் 22ல், ஒரே நாளன்று, 801 மனுக்கள் மீது விசாரணை நடத்தினார். இவற்றில் 572 வழக்குகளுக்கு தீர்ப்பளித்திருந்தார். இதில் 544 வழக்குகள் பெங்களூரு குடிநீர் வாரியம் சம்பந்தப்பட்டவை.

