4 ஏரிகளின் மேம்பாட்டுக்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு
4 ஏரிகளின் மேம்பாட்டுக்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு
ADDED : மார் 28, 2026 04:28 AM

மழைநீர் கால்வாய்: மஹாதேவபுரா மண்டலத்தில் 150 கி.மீ., மழைநீர் கால்வாய்களில், 72 கி.மீ.,க்கு இருபுறமும் கான்கிரீட் தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டு உள்ளன.
மழைநீர் கால்வாய்களில் அபாயகரமான 58 பகுதிகள் கண்டறியப்பட்டு, 38 பகுதிகளில் வெள்ள தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன.
தேசிய பேரிடர் நிதியின் கீழ் சித்தாபுரா, பெலிஷிவலே, பாலகெரே, எமலுார் போன்ற பகுதிகளில் 25 கோடி ரூபாய் மதிப்பில், மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
ஏரிகள் : 45 ஏரிகளில் 40 ஏரிகளின் மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்து உள்ளன. மீதமுள்ள நான்கு ஏரிகளின் மேம்பாட்டுக்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு
ஏரிகள் பராமரிக்கு ஆண்டுக்கு 28 கோடி ரூபாய் ஒதுக்கீடு
10 ஏரிகளில் தடுப்புகள் அமைக்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு
ஏரிகளில் நீரின் தரத்தை உயர்த்த, 'ஏரேட்டர்கள்', மிதக்கும் ஈர நிலங்கள் அமைத்தல், டிஜிட்டல் கண்காணிப்பு போன்ற நடவடிக்கை செயல்படுத்தப்படும்
ஏரிகள் பாதுகாப்புக்கான சமூக பங்கேற்பு கொள்கை - 2024 செயல்படுத்தப்படும்
பொது மக்கள் மற்றும் தனியார் அமைப்பினருடன் இணைந்து ஏரிகளில் பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஏரிகளின் பாதுகாப்பு மற்றும் காவல் பணிகளுக்கு தேவையான பணியாளர்கள் நியமிக்கப்படுவர்.
