தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சுற்றுச்சூழலை மேம்படுத்த 25,000 மரக்கன்று நடப்படும்

 சுற்றுச்சூழலை மேம்படுத்த 25,000 மரக்கன்று நடப்படும்

 சுற்றுச்சூழலை மேம்படுத்த 25,000 மரக்கன்று நடப்படும்


ADDED : மார் 29, 2026 03:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 03:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏரிகள்  தெற்கு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆறு ஏரிகள் மேம்படுத்தப்படும். ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. பேகூர், மடிவாலா ஏரிகள் சுற்றுலா நோக்கில் மேம் படுத்தப்படும்.

கல்வி  அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகள், குறிப்பேடுகள், பாடப்புத்தகங்கள் உள்ளிட்டவை வழங்க 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

 பள்ளி, கல்லுாரிகளில் துாய்மையான குடிநீர் வழங்க வழி செய்யப்படும்.

 அரசு பள்ளி, கல்லுாரிகளில் மோசமான நிலையில் உள்ள கட்டடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி வளாகங்களில் பார்க்கிங் வசதி மேம்படுத்தப்படும். 'ஸ்மார்ட்' வகுப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.

வனம்  சுற்றுச்சூழலை மேம்படுத்த, கிழக்கு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், மெட்ரோ நிறுவனத்துடன் இணைந்து 25,000 மரக்கன்றுகள் நடப்படும் . ஏரிகளின் கரையோரங்களில் 25,000 மூங்கில் மரங்கள் நடப்படும்.ஆபத்தான நிலையில் உள்ள காய்ந்த மரங்கள் அகற்றப்படும்.

தோட்டக்கலை  பசுமை பெங்களூரு திட்டத்தின் கீழ் எட்டு பூங்காக்கள் தரம் உயர்த்தப்பட உள்ளன. பூங்காக்களில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

சுகாதாரம்  ஈஜிபுராவில் 18.96 கோடி மதிப்பில், 50 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை அமைக்கப்படும். 13.03 கோடி மதிப்பில் 25 நகர்ப்புற சுகாதார மையங்கள்; 49 நம்ம கிளினிக்குகள் நிறுவப்படும்.

 சாலையோரங்களில் ஹோட்டல் வைத்திருக்கும் உரிமையாளர்கள், ஹோட்டல்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தூய்மை குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும்.

 இந்திரா உணவகங்களின் 'மெனு'வில் கூடுதலாக உணவு வகைகள் சேர்க்கப்படும். கொசுவை ஒழிக்க 8.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us