sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

ஓய்வு ஏ.சி.பி.,யை தாக்கி நகை கொள்ளையடித்த 3 பேர் கைது

/

ஓய்வு ஏ.சி.பி.,யை தாக்கி நகை கொள்ளையடித்த 3 பேர் கைது

ஓய்வு ஏ.சி.பி.,யை தாக்கி நகை கொள்ளையடித்த 3 பேர் கைது

ஓய்வு ஏ.சி.பி.,யை தாக்கி நகை கொள்ளையடித்த 3 பேர் கைது


ADDED : செப் 13, 2025 04:50 AM

Google News

ADDED : செப் 13, 2025 04:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சஞ்சய்நகர்: நடைப்பயிற்சி சென்ற ஓய்வு ஏ.சி.பி.,யை கத்தியால் குத்தி, எட்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த, மூன்று வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு, சஞ்சய்நகரில் வசிப்பவர் சுப்பண்ணா. உதவி போலீஸ் கமிஷனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

கடந்த 8ம் தேதி காலை 6:00 மணிக்கு ஹெப்பால் கால்நடை மருத்துவ கல்லுாரி மருத்துவமனை பகுதியில், நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு பைக்கில் வந்த மூன்று வாலிபர்கள், சுப்பண்ணாவை சுற்றி வளைத்தனர். கத்தியை காண்பித்து மிரட்டி, சுப்பண்ணா கழுத்தில் அணிந்த இரண்டு செயின்களை பறித்தனர்.

மூன்று பேரையும் சுப்பண்ணா பிடிக்க முயன்றபோது, கத்தியால் அவரை கையில் தாக்கிவிட்டு கைசெயின், மோதிரங்கள் உட்பட எட்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து தப்பினர்.

சுப்பண்ணா அளித்த புகாரை அடுத்து, சஞ்சய்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், டி.ஜே.ஹள்ளியின் சையத் மொஹ்சின், 30, முகமது சல்மான், 20, சையது இர்பான், 23 ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us