sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தனியார் பஸ்சில் தீ விபத்து 36 பயணியர் உயிர் தப்பினர்

 தனியார் பஸ்சில் தீ விபத்து 36 பயணியர் உயிர் தப்பினர்

 தனியார் பஸ்சில் தீ விபத்து 36 பயணியர் உயிர் தப்பினர்


ADDED : மே 17, 2026 12:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2026 12:39 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹாசன்: தனியார் சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்த விபத்தில், பஸ்சில் இருந்த 36 பயணியரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் இருந்து பெங்களூரு நோக்கி பயணியருடன் தனியார் சொகுசு பஸ் நேற்று முன்தினம் புறப்பட்டது. ஹாசன் மாவட்டம் சாந்திகிராமம் பகுதியில் நேற்று அதிகாலை 2:30 மணிக்கு பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென பஸ்சின் டயர் வெடித்தது. இதையடுத்து, பஸ்சை சாலையோரத்தில் ஓட்டுநர் நிறுத்தினார்.

பயணியர் அனைவரும் பஸ்சில் இருந்து உடனடியாக இறக்கப்பட்டனர். திடீரென பஸ்சில் தீப்பிடித்தது. பஸ் முழுதும் தீ பரவி எரிந்து நாசமாகியது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த 36 பயணியரும் உயிர் தப்பினர். தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். பயணியர் வேறு பஸ்சில் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சாந்திகிராமம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us