ADDED : அக் 20, 2025 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கார்வார்: மலைப்பாதையில் சென்ற போது, சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 49 பேர் காயம் அடைந்தனர்.
பல்லாரியில் இருந்து உத்தர கன்னடாவின் குமட்டாவுக்கு நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சில் டிரைவர், கண்டக்டர், பயணியர் என 49 பேர் இருந்தனர். சாலை பணிகளால் குமட்டா - சிர்சி சாலை மூடப்பட்டு இருந்ததால், அங்கோலாவில் உள்ள வாடி மலைப்பாதை சாலை வழியாக பஸ் திருப்பி விடப்பட்டது. இரவு 9:30 மணிக்கு மலைப்பாதை சாலையின் 7 வது திருப்பத்தில் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. பஸ்சில் இருந்த 49 பேரும் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று, பஸ்சில் இருந்தோரை மீட்டு அங்கோலா, குமட்டா மருத்துவமனைக்கு அனுப்பினர்.