/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாணவியருக்கு பாலியல் தொல்லை 64 வயது காமுக முதியவர் கைது
/
மாணவியருக்கு பாலியல் தொல்லை 64 வயது காமுக முதியவர் கைது
மாணவியருக்கு பாலியல் தொல்லை 64 வயது காமுக முதியவர் கைது
மாணவியருக்கு பாலியல் தொல்லை 64 வயது காமுக முதியவர் கைது
ADDED : பிப் 22, 2026 05:29 AM

சர்ஜாபூர்: பள்ளி வளாகத்தில் நுழைந்து, சாக்லெட் தருவதாக கூறி, ஒன்பது மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த, 64 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு ரூரல் ஆனேக்கல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 3ம் வகுப்பு மாணவி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனது பெற்றோரிடம், சாக்லெட் தருவதாக கூறி தாத்தா ஒருவர் தன்னை அநாகரீகமாக தொட்டார் என்று தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், கிருஷ்ணமூர்த்தி என்கிற கிட்டி, 64 என்பவரை, போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பள்ளி வளாகத்திற்குள் யாருக்கும் தெரியாமல் நுழையும் அவர், சாக்லெட் தருவதாக ஆசைவார்த்தை கூறி, இரண்டு, மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியர் ஒன்பது பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

