/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விசா காலம் முடிந்தும் பெங்களூரில் சட்டவிரோதமாக தங்கிய 7 பேர் கைது
/
விசா காலம் முடிந்தும் பெங்களூரில் சட்டவிரோதமாக தங்கிய 7 பேர் கைது
விசா காலம் முடிந்தும் பெங்களூரில் சட்டவிரோதமாக தங்கிய 7 பேர் கைது
விசா காலம் முடிந்தும் பெங்களூரில் சட்டவிரோதமாக தங்கிய 7 பேர் கைது
ADDED : பிப் 12, 2026 05:49 AM

சஞ்சய்நகர்: விசா காலம் முடிந்தும், பெங்களூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பெண் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கர்நாடகாவில் சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டினரை கண்டறிந்து நாடு கடத்த, போலீசாருக்கு, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் உத்தரவிட்டு உள்ளார்.
இதன் எதிரொலியாக சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டினரை கண்டறிந்து, அவர்களை நாடு கடத்தும் பணியில், போலீசார் மும்முரமாக உள்ளனர்.
இந்நிலையில் பெங்களூரு பூபசந்திராவில், வெளிநாடுகளை சேர்ந்த சிலர், சட்டவிரோதமாக வசிப்பது பற்றி, சஞ்சய்நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று முன்தினம் இரவு போலீசார் நடத்திய சோதனையில், வெளிநாட்டை சேர்ந்த பெண் உட்பட 7 பேர் விசா காலம் முடிந்தும், இங்கு தங்கி இருந்து தெரிந்தது.
ஏழு பேரையும் கைது செய்து, நெலமங்களா தாலுகா சொண்டேகொப்பா கிராமத்தில் உள்ள, வெளிநாட்டினர் தடுப்பு காவல் மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
கைதானவர்களில் 5 பேர் மத்திய ஆப்ரிக்காவின் கேமரூன், இரண்டு பேர் தெற்கு ஆப்ரிக்காவின் சூடானை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் விரைவில் நாடு கடத்தப்படுவர் என்று, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

