sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

118 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிர்வாக அதிகாரிகள் நியமனம் 

/

118 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிர்வாக அதிகாரிகள் நியமனம் 

118 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிர்வாக அதிகாரிகள் நியமனம் 

118 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிர்வாக அதிகாரிகள் நியமனம் 


ADDED : நவ 07, 2025 11:04 PM

Google News

ADDED : நவ 07, 2025 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பதவிக்காலம் நிறைவு பெற்ற 118 உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க கலெக்டர்கள், தாசில்தார்களை நிர்வாக அதிகாரியாக அரசு நியமித்துள்ளது.

கர்நாடகாவில் 42 நகராட்சிகள், 53 டவுன் சபைகள், 23 டவுன் பஞ்சாயத்துக்கள் என, 118 உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம், படிப்படியாக நிறைவு பெற்றன.

அந்த வகையில், தங்கவயல் நகரசபையின் பதவிக்காலம் அக்டோபர் 23லும் முல்பாகல் நகரசபையின் பதவிக் காலம் அக்டோபர் 31லும்; கோலார் நகரசபையின் பதவிக்காலம் நவம்பர் 1லும் நிறைவடைந்தது. சீனிவாசப்பூர் டவுன் சபைக்கு நவம்பர் 9லும் மாலுார் நகரசபையின் பதவிக்காலம் நவம்பர் 10லும் நிறைவடைகிறது.

தங்கவயல் நகரசபையின் பதவிக்காலத்தை நீட்டிக்கக்கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்காலம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. இதனால் கவுன்சிலர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

பதவிக்காலம் முடிவடைந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும். ஆனால் இடஒதுக்கீடு, ஆட்சேபனை வரைவு வடிவம் உட்பட பல காரணங்களால், ஆறு மாதங்களுக்கு தேர்தல் நடத்த முடியாது என, கர்நாடக தேர்தல் ஆணையத்திடம் அரசு தெரிவித்துள்ளது.

அதுவரை உள்ளாட்சிகளை நிர்வகிக்க, நியமன அதிகாரிகளை நியமித்து அரசு நேற்று உத்தரவிட்டது. இந்த சுற்றறிக்கை நேற்று அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

இதன்படி நகராட்சிகளுக்கு மாவட்ட கலெக்டர்களும், டவுன் சபைகளுக்கு உதவி கலெக்டர்களும், பட்டண பஞ்சாயத்துக்களுக்கு தாசில்தார்களும், இனி நிர்வாக அதிகாரியாக இருப்பார். தேர்தல் நடந்து கவுன்சிலர்கள் கையில் பொறுப்பு ஒப்படைத்த பின், நிர்வாக அதிகாரி பதவி ரத்தாகி விடும்.

கோலார் மாவட்டத்தின் தங்கவயல், முல்பாகல், கோலார், மாலுார் ஆகிய நகராட்சிகளுக்கும், சீனிவாசப்பூர் டவுன் சபைக்கும் நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தங்கவயல் நகராட்சிக்கு நிர்வாக அதிகாரியாக கோலார் மாவட்ட கலெக்டர் எம்.ஆர்.ரவியை அரசு நியமித்துள்ளது. இதற்கான உத்தரவை, நகராட்சி தலைவர் அறையின் முன் நகராட்சி ஆணையர் ஆஞ்சநேயலு ஒட்டினார்.

- நமது நிருபர் -:






      Dinamalar
      Follow us