sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ முஸ்லிம்கள் சிறுபான்மையினரா? பா.ஜ., - எம்.எல்.சி., கேள்வி!

முஸ்லிம்கள் சிறுபான்மையினரா? பா.ஜ., - எம்.எல்.சி., கேள்வி!

முஸ்லிம்கள் சிறுபான்மையினரா? பா.ஜ., - எம்.எல்.சி., கேள்வி!


ADDED : ஏப் 14, 2025 06:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2025 06:56 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிக்கமகளூரு : ''கர்நாடகாவில் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட முஸ்லிம்கள் எப்படி சிறுபான்மையினர் ஆவர்,'' என பா.ஜ., - எம்.எல்.சி., சி.டி.ரவி கேள்வி எழுப்பினார்.

சிக்கமகளூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

அரசியலமைப்பு சாசனத்தின் படி, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசிடம் மட்டுமே உள்ளது. தற்போது வரை அதிகாரப்பூர்வமாக ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு வெளியிடவில்லை.

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து வெளியான தரவுகளை வைத்து பார்த்தால், மாநிலத்தில் இரண்டாவது பெரிய மக்கள் தொகை உடையவர்களாக முஸ்லிம்கள் உள்ளனர். அப்படி இருக்கையில், அவர்களை எப்படி சிறுபான்மையினர் என கூற முடியும்.

இட ஒதுக்கீடு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட போது, அதற்கு ஆதரவாக மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இது, இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவான பா.ஜ.,வின் நிலைப்பாட்டை காட்டுகிறது. சமூக நீதி என்பது பா.ஜ.,வின் உறுதிப்பாடு.

சமூகத்தில் பிளவுகளை உண்டாக்கும் வகையில் செயல்படுவோருக்கு பா.ஜ., ஆதரவு அளிக்காது. ஆனால், சில அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஹிந்து மதத்தில் உள்ளவர்களை ஜாதி அடிப்படையில் பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us