sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

துப்பாக்கி காட்டி மிரட்டல் ஏ.எஸ்.ஐ.,யிடம் விசாரணை

/

துப்பாக்கி காட்டி மிரட்டல் ஏ.எஸ்.ஐ.,யிடம் விசாரணை

துப்பாக்கி காட்டி மிரட்டல் ஏ.எஸ்.ஐ.,யிடம் விசாரணை

துப்பாக்கி காட்டி மிரட்டல் ஏ.எஸ்.ஐ.,யிடம் விசாரணை


ADDED : ஜூன் 04, 2025 01:19 AM

Google News

ADDED : ஜூன் 04, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மடிவாளா : ஹோட்டல் ஊழியர்களிடம் துப்பாக்கியை காண்பித்து மிரட்டிய, ஏ.எஸ்.ஐ.,யிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பெங்களூரு மடிவாளா போலீஸ் நிலைய ஏ.எஸ்.ஐ., குமார், 45. இவர், கடந்த மாதம் 23ம் தேதி ஜக்கசந்திராவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணி செய்யும் ஊழியர்களை துப்பாக்கியை காண்பித்து மிரட்டிய வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியானது. இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகம் சார்பில், தென்கிழக்கு மண்டல டி.சி.பி., சாரா பாத்திமாவிடம் புகார் செய்யப்பட்டது. குமாரிடம் விசாரிக்க, டி.சி.பி., உத்தரவிட்டார்.

விசாரணையின் போது, 'ஹோட்டல் நிர்வாகத்துக்கும், ஊழியர்களுக்கும் இடையில் சம்பளம் தொடர்பாக தகவல் இருந்தது. கடந்த 23 ம் தேதி தகராறு ஏற்பட்டது. இதுபற்றி அங்கு வேலை செய்யும் ஊழியர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதனால் நான் அங்கு சென்று விசாரித்தேன். நான் அணிந்திருந்த காக்கி பேன்ட்டில் பொருத்தப்பட்டு இருக்கும் துப்பாக்கியை வைக்கும் பை கிழிந்து இருந்தது. இதனால், துப்பாக்கியை கையில் எடுத்து வைத்திருந்தேன்' என்று குமார் கூறினார்.

ஆனால், ஹோட்டலில் பிரச்னை நடப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கோ, போலீஸ் நிலையத்திற்கோ எந்த தகவலும் வரவில்லை என்பது தெரிந்து உள்ளது. குமார் ஏன் பொய் சொன்னார், ஹோட்டல் ஊழியர்களை ஏன் துப்பாக்கியை காட்டி மிரட்டினார் என்று தெரியவில்லை. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.






      Dinamalar
      Follow us