sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

கொலை கைதி மீது தாக்குதல்

/

கொலை கைதி மீது தாக்குதல்

கொலை கைதி மீது தாக்குதல்

கொலை கைதி மீது தாக்குதல்


ADDED : மே 20, 2025 12:07 AM

Google News

ADDED : மே 20, 2025 12:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தட்சிண கன்னடா: மங்களூரு பஜ்ரங்தள் பிரமுகர் சுகாஸ் ஷெட்டி கொலை வழக்கில் முக்கிய கைதியை, சிறையிலேயே சில கைதிகள் தாக்கினர்.

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரில், பஜ்ரங்தள் பிரமுகர் சுகாஸ் ஷெட்டி, படுகொலை செய்யப்பட்டார். இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமறைவாக இருந்த சோட்டா நவுசத், சமீபத்தில் கைது செய்யப்பட்டார். மங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். நேற்றுடன் போலீஸ் கஸ்டடி முடிந்ததால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சுகாஸ் கொலையில் சோட்டா நவுசத் மீது தாக்குதல் நடக்கலாம் என்று புலனாய்வு துறை அதிகாரிகள் எச்சரித்து இருந்தனர். எனவே, அவரை, மைசூரு சிறைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

மங்களூரு சிறைக்கு நவுசத் அழைத்து வரப்பட்ட போது, அங்கிருந்த மற்ற கைதிகள், தங்கள் கையில் கிடைத்த கல் உட்பட மற்ற பொருட்களால் அவரை தாக்கினர்.

சிறை ஊழியர்கள், அவரை மீட்டனர். அவருக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us