sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

கருவை கலைத்த சிறுமி ஆட்டோ ஓட்டுநர் கைது

/

கருவை கலைத்த சிறுமி ஆட்டோ ஓட்டுநர் கைது

கருவை கலைத்த சிறுமி ஆட்டோ ஓட்டுநர் கைது

கருவை கலைத்த சிறுமி ஆட்டோ ஓட்டுநர் கைது


ADDED : ஏப் 21, 2025 05:11 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலஹங்கா: பெங்களூரு, எலஹங்கா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கோகிலு கிராசில், மூன்று நாட்களுக்கு முன், குப்பை தொட்டியில், பிளாஸ்டிக் காகிதத்தில், சுற்றப்பட்ட நிலையில் 'ஆண் கரு' கண்டெடுக்கப்பட்டது.

வழக்கு பதிவு செய்த எலஹங்கா போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது வயதான நபர், பிளாஸ்டிக் கவரை வீசியது தெரியவந்தது. அவரை கண்டுபிடித்து விசாரித்த போது, தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுமி கொடுத்தார் என கூறியுள்ளார்.

இதையடுத்து, அச்சிறுமியிடம் போலீசார் விசாரித்து உள்ளனர். இதில் பல தகவல்கள் வெளி வந்தன. இச்சிறுமி பி.யு.சி., படித்து வந்தார். படிப்பையும் பாதியில் நிறுத்தியது தெரியவந்தது.

சிறுமியும், அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்த பாரத், 21, என்ற வாலிபரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக அவர் உறுதி அளித்ததால், இருவரும் நெருக்கமாகினர். இதில், சிறுமி கர்ப்பமானார்.

இதை வீட்டில் தெரிவித்தால் தொலைத்து விடுவர் என்று அஞ்சிய சிறுமி, தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் ஆலோசனைப்படி, 'கருக்கலைப்பு மாத்திரை' வாங்கி சாப்பிட்டுள்ளார். இதனால் கரு கலைந்தது. அன்றைய தினம், தனது நண்பர்களிடம் கருவை கொடுத்து, பிளாஸ்டிக் கவரில் நன்றாக சுற்றி, பக்கத்து வீட்டு முதியவரிடம் கொடுத்து சாக்கடையில் வீசியது தெரிய வந்தது.

இதையடுத்து, சிறுமியை கர்ப்பமாக்கிய பாரத்தை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us