/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பார்லிமென்ட் வளாகத்தில் பசவண்ணர் ஜெயந்தி
/
பார்லிமென்ட் வளாகத்தில் பசவண்ணர் ஜெயந்தி
ADDED : ஏப் 22, 2025 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லியில் உள்ள பார்லிமென்ட் வளாகத்தில், வரும் 30ம் தேதி பசவண்ணர் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது.
மத்திய அமைச்சர் சோமண்ணா நேற்று அளித்த பேட்டி:
பார்லிமென்ட் வளாகத்தில் பசவண்ணர் ஜெயந்தி கொண்டாடுவது குறித்து, சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதி அளித்துள்ளார். இம்மாதம் 30ம் தேதி பசவண்ணர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
பல்வேறு மடாதிபதிகள் பங்கேற்கின்றனர். பங்கேற்க விரும்புவோர், வரும் 25ம் தேதிக்குள் ஆதார் அடையாள அட்டையை சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
. - நமது நிருபர் -