sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

அரசு அலுவலகத்தின் ஒவ்வொரு படியும் பணம் கேட்பதாக பா.ஜ., குற்றச்சாட்டு

/

அரசு அலுவலகத்தின் ஒவ்வொரு படியும் பணம் கேட்பதாக பா.ஜ., குற்றச்சாட்டு

அரசு அலுவலகத்தின் ஒவ்வொரு படியும் பணம் கேட்பதாக பா.ஜ., குற்றச்சாட்டு

அரசு அலுவலகத்தின் ஒவ்வொரு படியும் பணம் கேட்பதாக பா.ஜ., குற்றச்சாட்டு


ADDED : ஜூன் 18, 2025 11:18 PM

Google News

ADDED : ஜூன் 18, 2025 11:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல்: “அரசு அலுவலகங்களின் ஒவ்வொரு படியும் பணம் கேட்கிறது. பொதுமக்கள் அரசு அலுவலகங்கள் செல்ல அச்சப்படுகின்றனர்,” என, தங்கவயல் தொகுதி பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., சம்பங்கி தெரிவித்தார்.

கர்நாடக காங்கிரஸ் அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து, ராபர்ட்சன் பேட்டையில் நேற்று பா.ஜ.,வினர் தர்ணா நடத்தினர். அப்போது, சம்பங்கி பேசியதாவது:

கர்நாடகாவில் விவசாயிகள் தற்கொலை தொடர்கிறது. பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.

சமீபத்தில், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி வெற்றியை கொண்டாடியபோது உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யாததால், 11 பேர் உயிரிழந்தனர்.

வெற்றி விழாவை ஒரு வாரம் கடந்த பின் நடத்தலாம் என அப்போதைய பெங்களூரு போலீஸ் ஆணையர் தயானந்த் தெரிவித்ததை அலட்சியப்படுத்தினர்.

ஆளும் காங்கிரஸ் அரசு தான் பொறுப்பு. ஆனால், அப்பாவி போலீஸ் அதிகாரிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

ஐந்து வாக்குறுதி திட்டங்களுக்காக அரசு கஜானா காலியாகி உள்ளது. அரசு ஊழியர்களுக்கு உரிய நாளில் சம்பளம் கிடைக்கவில்லை.

ஒவ்வொரு அலுவலகத்திலும் ஒவ்வொரு படிக்கட்டும் பணம் எதிர்பார்க்கிறது. அரசு அலுவலகங்கள் செல்லவே மக்கள் அச்சப்படுகின்றனர். இந்த அரசு லாயக்கற்றதாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

பா.ஜ.,வின் தங்கவயல் கிராம பகுதி தலைவர் லட்சுமண், நகர பகுதி தலைவர் சுரேஷ் குமார், கவுன்சிலர் வேணி பாண்டியன், பாபி சுரேஷ், மேகநாதன், ரவிகுமார், நவராஜ் குமார், சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us