அம்பேத்கர் வருகை 100 ஆண்டு பா.ஜ., விழிப்புணர்வு யாத்திரை
அம்பேத்கர் வருகை 100 ஆண்டு பா.ஜ., விழிப்புணர்வு யாத்திரை
ADDED : ஏப் 11, 2025 11:19 PM

அ நிறம் | அளவு
பெங்களூரு: பெலகாவியில் உள்ள நிப்பானிக்கு அம்பேத்கர் வருகை தந்து நுாறு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பா.ஜ., சார்பில் நான்கு நாட்கள் விழிப்புணர்வு யாத்திரை நேற்று துவங்கியது.
பெங்களூரு, விதான் சவுதா வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைப்பகுதியில் நேற்று 'பீமா 100 வது ஆண்டு கொண்டாட்டம்' எனும் விழிப்புணர்வு யாத்திரை நேற்று துவங்கியது. இந்நிகழ்ச்சி க14ம் தேதி வரை நடக்க உள்ளது.
பெங்களூரிலிருந்த வாகனங்கள் மூலம் மாநிலத்தின் பல பகுதிகள் வழியாக நிப்பானி சென்றடைவர். அங்கு பொதுக்கூட்டம் நடக்கிறது.
சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், மேலவை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, பா.ஜ., - எம்.பி., கோவிந்தராஜ் கார்ஜோள், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் உட்பட பலர், அம்பேத்கருக்கு புகழாரம் சூட்டினர்.
