sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 வீணை வாசித்து அசத்திய பா.ஜ., - எம்.பி., யதுவீர்

/

 வீணை வாசித்து அசத்திய பா.ஜ., - எம்.பி., யதுவீர்

 வீணை வாசித்து அசத்திய பா.ஜ., - எம்.பி., யதுவீர்

 வீணை வாசித்து அசத்திய பா.ஜ., - எம்.பி., யதுவீர்


ADDED : ஜன 20, 2026 06:32 AM

Google News

ADDED : ஜன 20, 2026 06:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷிவமொக்கா: ஷிவமொக்காவில் நடந்த சரஸ்வதி சங்கீத வித்யாலயா வெள்ளி விழாவில், மைசூரு எம்.பி., யதுவீர், வீணை வாசித்து பார்வையாளர்களை அசத்தினார்.

ஷிவமொக்காவில் நடந்த சரஸ்வதி சங்கீத வித்யாலயாவின் வெள்ளி விழாவில் மைசூரு எம்.பி.,யும், மைசூரு மன்னர் குடும்பத்தை சேர்ந்தவருமான யதுவீர் பங்கேற்றார்.

வெள்ளி விழாவின் ஒரு பகுதியாக, கலாசார நிகழ்ச்சியாக 'வீணை திரிசதோத்சவா' நடந்தது. வீணை வாசிப்பதில் முறையாக பயிற்சி பெற்ற யதுவீர், வீணை வாசித்து பார்வையாளர்களை பரவசப்படுத்தினார்.

பின், அவர் பேசியதாவது:

மேற்கத்திய இசையை வரவேற்பதுடன், கர்நாடகத்தின் பாரம்பரிய இசையையும் பாதுகாத்து வளர்க்க வேண்டும். அப்போது தான், நல்ல சமூகத்தை உருவாக்க முடியும்.

மைசூரு உட்பட பல்வேறு அரசு குடும்பங்கள், தங்களை கலை பாரம்பரியத்தை பாதுகாத்து வருகின்றன. கர்நாடக இசை மற்றும் கலையை பாதுகாக்க ஊக்கமளிக்கும் சரஸ்வதி சங்கீத வித்யாலயாவின் பணியை மறக்க முடியாது. இதுபோன்று அர்த்தமுள்ள நிகழ்ச்சிகளை மாநிலம் முழுதும் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us