sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

இளம்பெண்ணை சாகடித்த பஸ் நடத்துநர் 'சஸ்பெண்ட்'

/

இளம்பெண்ணை சாகடித்த பஸ் நடத்துநர் 'சஸ்பெண்ட்'

இளம்பெண்ணை சாகடித்த பஸ் நடத்துநர் 'சஸ்பெண்ட்'

இளம்பெண்ணை சாகடித்த பஸ் நடத்துநர் 'சஸ்பெண்ட்'


ADDED : ஜூலை 21, 2025 07:19 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 07:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : பி.எம்.டி.சி., பஸ் ஓட்டி இளம் பெண்ணை சாகடித்த பி.எம்.டி.சி., நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பெங்களூரு பீன்யா 2வது ஸ்டேஜில், கடந்த 18ம் தேதி, பி.எம்.டி.சி., பஸ்சை, நடத்துநர் ஓட்ட முயற்சி செய்த போது, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த ஐந்து பேர் மீது பஸ் மோதியது. இதில், வங்கியில் வேலை பார்த்து வந்த பெண் ஊழியர் சுமா, 25, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர். பீன்யா போக்குவரத்து போலீசார், நடத்துநர் ரமேஷை கைது செய்தனர்.

இந்நிலையில், பஸ்சில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் நேற்று வெளியாகின. அதில், நடத்துநர் பஸ்சை ஓட்ட தெரியாமல் மோதியது தெளிவாக தெரிந்தது. இதையடுத்து, உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் அளிப்பதாகவும்; நடத்துநர் ரமேஷை சஸ்பெண்ட் செய்து உள்ளதாகவும் பி.எம்.டி.சி., தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டிரைவர் ஓட்ட வேண்டிய பஸ்சை நடத்துநர் ஓட்டி, இளம் பெண்ணின் உயிரை பறித்து உள்ளார். இவ்வளவு பெரிய தவறு செய்த நடத்துநரை சஸ்பெண்ட் மட்டும் செய்து உள்ளனர். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே நிதியுதவி அளிக்கப்பட்டது சரியா என பி.எம்.டி.சி., மீது மக்கள் கோபம் அடைந்து உள்ளனர்.

'ஒரு உயிரின் விலை, ஒரு லட்சம் தானா' என, பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us