sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

அறுசுவை

/

 மரவள்ளி கிழங்கு மசாலா செய்யலாமா?

/

 மரவள்ளி கிழங்கு மசாலா செய்யலாமா?

 மரவள்ளி கிழங்கு மசாலா செய்யலாமா?

 மரவள்ளி கிழங்கு மசாலா செய்யலாமா?


ADDED : ஜன 03, 2026 07:03 AM

Google News

ADDED : ஜன 03, 2026 07:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -:

சாப்பாட்டுக்கு தொட்டுக்க, மரவள்ளி கிழங்கு மசாலா எப்படி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

l மரவள்ளி கிழங்கு - 1/4 கிலோ

l கடுகு - 1/2 டீஸ்பூன்

l இஞ்சி - சிறிது

l பச்சை மிளகாய் - 1

l கறிவேப்பிலை - ஒரு கொத்து

l சின்ன வெங்காயம் - 1 கப்

l தக்காளி - 1

l மல்லி தூள் - 1 டீஸ்பூன்

l மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

l மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

l கொத்தமல்லி - சிறிதளவு

l தேங்காய் எண்ணெய் தேவையான அளவு

l உப்பு தேவையான அளவு

செய்முறை

முதலில் மரவள்ளி கிழங்கை தோல் சீவி, துண்டுகளாக நறுக்கி குக்கரில் போட்டு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின் மல்லி துாள், மிளகாய் துாள் சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

பின், கொதி வந்ததும் வேக வைத்துள்ள மரவள்ளி கிழங்கை சேர்த்து தண்ணீர் சுண்டும் அளவிற்கு நன்கு வதக்கவும்.

இதில், தேங்காய் பால் சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் கழித்து கொத்தமல்லி தழைகளை துாவி இறக்கவும்.

அவ்வளவுதான் சுவையான மரவள்ளிக்கிழங்கு மசாலா தயார். இதை சாம்பார் சாதத்துடன் தொட்டு சாப்பிடும் போது, சுவை அருமையாக இருக்கும்.






      Dinamalar
      Follow us