sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

43 பேர் மீதான வழக்கு: ஹைகோர்ட்டில் அரசு உத்தரவாதம்

/

43 பேர் மீதான வழக்கு: ஹைகோர்ட்டில் அரசு உத்தரவாதம்

43 பேர் மீதான வழக்கு: ஹைகோர்ட்டில் அரசு உத்தரவாதம்

43 பேர் மீதான வழக்கு: ஹைகோர்ட்டில் அரசு உத்தரவாதம்


ADDED : மார் 25, 2025 12:52 AM

Google News

ADDED : மார் 25, 2025 12:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : 'செல்வாக்குமிக்க 43 பேருக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை, ஏப்., 8ம் தேதி வரை வாபஸ் பெற போவதில்லை' என, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், மாநில அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், விவசாய சங்க தலைவர்கள், கன்னட அமைப்பினர் உட்பட செல்வாக்குமிக்க 43 நபர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகளை வாபஸ் பெறுவதாக மாநில அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பெங்களூரு வழக்கறிஞர் கிரிஷ் பரத்வாஜ், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், '2024 அக்டோபரில், செல்வாக்குமிக்க 43 பேருக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

'இது சி.ஆர்.பி.சி., 321வது பிரிவின்படி சட்ட விரோதமாகும். போலீஸ், வழக்கு விசாரணை துறைகள், இந்த வழக்குகள் திரும்ப பெறுவதற்கு ஏற்றவை அல்ல என்று பரிந்துரைத்தும், அதற்கு எதிராக, அமைச்சரவையில் முடிவு செய்துள்ளனர்' என்று குறிப்பிட்டிருந்தார்.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அஞ்சாரியா, நீதிபதி அரவிந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு, அறிக்கை சமர்ப்பிக்கும்படி மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

இம்மனு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம் கோரப்பட்டது.

இதற்கு மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வெங்கடேஷ் தல்வாய் வாதிடுகையில், ''அப்படி என்றால், மேலும் நிலுவையில் உள்ள 21 வழக்குகளை வாபஸ் பெற மாட்டோம் என்று உறுதி அளிக்க வேண்டும்,'' என்று கேட்டுக் கொண்டார்.

இதை ஏற்றுக் கொண்ட அரசு வழக்கறிஞரும், வாய்மொழியாக உறுதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து அமர்வு கூறுகையில், 'கூடுதல் அரசு வழக்கறிஞர் நிலோபர் அக்பர், அடுத்த விசாரணை வரும் வரை, வழக்குகள் வாபஸ் பெறப்படாது என்று உறுதி அளித்துள்ளார். எனவே, இவ்வழக்கு விசாரணை, ஏப்., 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது' என, கூறியது.






      Dinamalar
      Follow us