sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

சொத்துக்காக தாய் மீது தாக்குதல் வளர்ப்பு மகன் மீது வழக்கு

/

சொத்துக்காக தாய் மீது தாக்குதல் வளர்ப்பு மகன் மீது வழக்கு

சொத்துக்காக தாய் மீது தாக்குதல் வளர்ப்பு மகன் மீது வழக்கு

சொத்துக்காக தாய் மீது தாக்குதல் வளர்ப்பு மகன் மீது வழக்கு


ADDED : மே 26, 2025 12:52 AM

Google News

ADDED : மே 26, 2025 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராம்நகர் : சொத்து மீதான ஆசையால், வளர்ப்பு தாயை கண்மூடித்தனமாக தாக்கிய மகன் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.

ராம்நகர், சென்னபட்டணா தாலுகாவில் வசிப்பவர் நீலம்மா, 60. இவருக்கு திருமணமாகி, இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களுடன், ஆதரவற்ற ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்து, ஈஸ்வர் என பெயர் சூட்டி வளர்த்தார். தற்போது ஈஸ்வருக்கு 27 வயதாகிறது.

தனக்கும் சொத்துகளில் பங்கு வேண்டும்; பணம் வேண்டும் என, தாயுடன் தினமும் ஈஸ்வர் தகராறு செய்து வந்தார். இரண்டு மகன்களுக்கு திருமணமாகியுள்ளது. ஈஸ்வருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

கணவரை இழந்த நீலம்மா, வளர்ப்பு மகனின் தொந்தரவு தாங்க முடியாமல், தன் தம்பியின் வீட்டில் வசிக்கிறார். நேற்று காலை தன் கூட்டாளிகளுடன், மாமா வீட்டுக்கு வந்த ஈஸ்வர், தன் தாயின் தலைமுடியை பிடித்து, வெளியே இழுத்து வந்து கண் மூடித்தனமாக தாக்கினார். இதுகுறித்து, சென்னப்பட்டணா போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது.






      Dinamalar
      Follow us