/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பாலினம் அறிந்து கருக்கலைப்பு டாக்டர் உட்பட ஐவர் மீது வழக்கு
/
பாலினம் அறிந்து கருக்கலைப்பு டாக்டர் உட்பட ஐவர் மீது வழக்கு
பாலினம் அறிந்து கருக்கலைப்பு டாக்டர் உட்பட ஐவர் மீது வழக்கு
பாலினம் அறிந்து கருக்கலைப்பு டாக்டர் உட்பட ஐவர் மீது வழக்கு
ADDED : செப் 03, 2025 01:03 AM
ராம்நகர் : வயிற்றில் இருக்கும் கருவின் பாலினம் அறிந்து, கருக்கலைப்பு செய்த வழக்கில், தனியார் மருத்துவமனை டாக்டர் உட்பட ஐந்து பேர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.
ராம்நகரின் தட்டகுனியை சேர்ந்தவர், 35 வயது பெண். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூன்றாவதாக கருவுற்றார்.
மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால் வளர்ப்பது கஷ்டம் என்று அவரும், அவரது கணவரும் கருதினர். ராம்நகர் அரசு மருத்துவமனைக்கு சென்று, வயிற்றை ஸ்கேன் செய்து வயிற்றில் வளர்வது பெண் கரு என்று தெரிந்து கொண்டனர்.
பின், வயிற்றில் வளரும் கருவை பெண் கலைத்தார். உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி அறிந்த மாவட்ட சுகாதார அதிகாரிகள், கடந்த மாதம் 26ம் தேதி, ராம்நகர் அரசு மருத்துவமனைக்கு சென்று, குழந்தையின் பாலினத்தை கண்டறிய உதவிய ஸ்கேன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.
சுகாதார அதிகாரிகள் அளித்த புகாரில், ராம்நகர் டவுன் போலீசார் விசாரித்தனர். பெங்களூரு பாதராயனபுராவில் வசிக்கும் தனியார் டாக்டர் பல்லவி, சென்னப்பட்டணாவை சேர்ந்த லட்சுமி, பாகம்மா, பெண்ணின் கணவர் தடகுனி ஆகியோரின் பங்கு குறித்து விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஐந்து பேர் மீதும் நேற்று போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.