sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 உதவி ஜெயிலரை தாக்கிய  இரண்டு கைதிகள் மீது வழக்கு 

/

 உதவி ஜெயிலரை தாக்கிய  இரண்டு கைதிகள் மீது வழக்கு 

 உதவி ஜெயிலரை தாக்கிய  இரண்டு கைதிகள் மீது வழக்கு 

 உதவி ஜெயிலரை தாக்கிய  இரண்டு கைதிகள் மீது வழக்கு 


ADDED : ஜன 19, 2026 05:51 AM

Google News

ADDED : ஜன 19, 2026 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில் உதவி ஜெயிலரை தாக்கிய, இரண்டு கைதிகள் மீது வழக்கு பதிவாகியுள்ளது.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 4,000 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். கர்நாடக சிறைக்குள் அதிக சட்ட விரோத செயல்கள் நடக்கும் இடமாக, இந்த சிறை உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ரவுடி குப்பாச்சி சீனா தனது ஆதரவாளர்களுடன் சிறைக்குள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள், சிறைக்குள்ளேயே வைத்து கைதிகள் மது அருந்தும் வீடியோக்கள், ஒரு பயங்கரவாதி மொபைல் போன் பயன்படுத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை அடுத்து சிறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. சிறையின் தலைமை கண்காணிப்பாளராக முதல் முறையாக ஐ.பி.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட்டார். சிறைத்துறை டி.ஜி.பி., அலோக் குமாரும் சிறைக்குள் சென்று ஆய்வு நடத்தினார்.

இந்நிலையில் கடந்த 7ம் தேதி சிறை உதவி ஜெயிலர், இரண்டு ஊழியர்களை, விசாரணை கைதிகள் ஆனந்த், அப்துல் கனி ஆகியோர் தாக்கிய சம்பவம் தாமதமாக தற்போது வெளிச்சத்துக்கு வந்து உள்ளது. இவர்கள் இருவரும் உதவி ஜெயிலர் அலுவலகத்திற்கு அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை தடுத்ததால் தாக்கி உள்ளனர்.

இது குறித்த புகாரின் பேரில் இரு கைதிகள் மீதும் பரப்பன அக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம், சிறையில் என்ன தான் சீர்திருத்தம் செய்தாலும் கைதிகள் அட்டகாசம் தொடர்வதை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை காட்டுகிறது.






      Dinamalar
      Follow us