sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

வனத்துறையினரை கூண்டில் தள்ளிய 5 விவசாயிகள் மீது வழக்கு பதிவு 

/

வனத்துறையினரை கூண்டில் தள்ளிய 5 விவசாயிகள் மீது வழக்கு பதிவு 

வனத்துறையினரை கூண்டில் தள்ளிய 5 விவசாயிகள் மீது வழக்கு பதிவு 

வனத்துறையினரை கூண்டில் தள்ளிய 5 விவசாயிகள் மீது வழக்கு பதிவு 


ADDED : செப் 11, 2025 07:50 AM

Google News

ADDED : செப் 11, 2025 07:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாம்ராஜ் நகர் : புலியை பிடிக்க தாமதமாக வந்த வனத்துறை ஊழியர்களை கூண்டில் சிறை வைத்த ஐந்து விவசாயிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சாம்ராஜ்நகர் குண்டுலுபேட் பொம்மலாபூர் கிராமத்தில் புலியை பார்த்த கிராமத்தினர், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் வர தாமதமானதால், புலி சென்றுவிட்டது. இதனால் கோபமடைந்த கிராமத்தினர், பத்து வனத்துறை ஊழியர்களை, புலியை பிடிக்கும் கூண்டில் தள்ளி பூட்டினர்.

தகவல் அறிந்த வனத்துறை உயர் அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு வந்து கிராமத்தினரை சமாதானப்படுத்தினர். வனத்துறை ஊழியர்களை கூண்டில் அடைத்த கிராமத்தை சேர்ந்த ரகு, பிரசாத், தீபு, கங்காதர் சுவாமி, ரேவண்ணா ஆகியோர் மீது வனத்துறை துணை அதிகாரி ஞானசேகர், குண்டுலுபேட் போலீசில் புகார் அளித்தனர். போலீசாரும் வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கு விவசாயிகள் சங்கத்தினர் அதிருப்தி வெளிப்படுத்தி உள்ளனர்.

அவர்கள் கூறுகையில், 'புலியை பிடிக்க கூண்டில் கன்று குட்டியை கட்டிய வனத்துறையினர், அதற்கு தண்ணீர், தீவனம் வழங்காமல் கன்று சாவதற்கு காரணமாகினர். அதுபோன்று புலியை பிடிக்க தாமதமாக வந்த கோபத்தில் கூண்டில் தள்ளி பூட்டினர்.

'வனத்துறையினரை யாரும் அடிக்கவில்லை, மிரட்டவில்லை. பொய் வழக்கு பதிவு செய்து, எங்களை கட்டுப்படுத்த நினைத்தால், சும்மா இருக்க மாட்டோம். எங்கள் மீது புகார் கொடுத்தவுடன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வரும் நாட்களில் ஆடுகள், மாடுகள் இறந்தால் வனத்துறையினர் மீது வழக்கு பதிவு செய்வீர்களா' என்றனர்.






      Dinamalar
      Follow us