sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

வடமேற்கு போக்குவரத்து கழகத்துக்கு 200 'இ - பஸ்' வழங்கும் மத்திய அரசு

/

வடமேற்கு போக்குவரத்து கழகத்துக்கு 200 'இ - பஸ்' வழங்கும் மத்திய அரசு

வடமேற்கு போக்குவரத்து கழகத்துக்கு 200 'இ - பஸ்' வழங்கும் மத்திய அரசு

வடமேற்கு போக்குவரத்து கழகத்துக்கு 200 'இ - பஸ்' வழங்கும் மத்திய அரசு


ADDED : அக் 09, 2025 05:18 AM

Google News

ADDED : அக் 09, 2025 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : வடமேற்கு கர்நாடக போக்குவரத்துக் கழகத்துக்கு, 200 மின்சார பஸ்களை வழங்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதல் கட்டமாக ஹூப்பள்ளி - தார்வாட் இரட்டை நகரங்களுக்கு, 100 மின்சார பஸ்கள் வழங்கப்பட உள்ளன.

இதுகுறித்து, போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது:

மத்திய அரசின், பிரதமரின் மின்சார பஸ்கள் திட்டத்துக்கு, வடமேற்கு கர்நாடக போக்குவரத்துக் கழகத்தின் ஹூப்பள்ளி, பெலகாவி நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றுக்கு, 200 மின்சார பஸ்கள் வழங்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பெலகாவிக்கு, 100 பஸ்களும், ஹூப்பள்ளி - தார்வாட் இரட்டை நகரங்களுக்கு, 100 பஸ்களும் கிடைக்கும். மின்சார பஸ்கள் வருவதால், அதற்கென பணிமனை அமைக்க திட்டமிட்டுள்ளோம். ஹூப்பள்ளி மற்றும் பெலகாவியில், தலா ஐந்து ஏக்கர் பரப்பளவில், 31.47 கோடி ரூபாய் பணிமனைகள் கட்டப்படும்.

இதில் சிவில் பணிகளுக்கு 16.39 கோடி ரூபாயும், எலக்ட்ரிக்கல் பணிகளுக்கு, 14.88 கோடி ரூபாயும் செலவிடப்படும். இங்கு சார்ஜிங் வசதியும் செய்யப்படும்.

பணிமனைகள் கட்டுவது குறித்து, மத்திய அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. எங்கள் அதிகாரிகள் விரிவான தகவல் தெரிவித்துள்ளனர்.

டில்லியிலும் ஆலோசனை நடந்துள்ளது. திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் கிடைத்தவுடன், பணிமனை கட்டும் பணிகள் துவக்கப்படும்.

ஒப்பந்த அடிப்படையில், மின்சார பஸ்கள் பெறப்படும். மத்திய அரசு ஓட்டுநர்களை நியமிக்கும். போக்குவரத்துக் கழகம் நடத்துநர்களை நியமிக்கும். பஸ்களை வழங்க டெண்டர் பெறும் நிறுவனங்களே, பஸ்களை நிர்வகிக்கும்.

ஹூப்பள்ளி - தார்வாட் இரட்டை நகரங்களில், 450க்கும் மேற்பட்ட பஸ்கள் உள்ளன. ஒரு பஸ்சை 15 ஆண்டுகள் இயக்கலாம்.

ஆண்டுதோறும், 250 பஸ்கள் பழைய இரும்பு கடைக்கு அனுப்பப்படுகின்றன. இதனால் பஸ்கள் பற்றாக்குறை உள்ளது. மின்சார பஸ்கள் இயக்கப்பட்டால், பற்றாக்குறைக்கு தீர்வு கிடைக்கும். மக்களுக்கு தரமான போக்குவரத்து சேவை வழங்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us