sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

தாய், சேய் இறப்பு டாக்டர்கள் மீது புகார்

/

தாய், சேய் இறப்பு டாக்டர்கள் மீது புகார்

தாய், சேய் இறப்பு டாக்டர்கள் மீது புகார்

தாய், சேய் இறப்பு டாக்டர்கள் மீது புகார்


ADDED : ஆக 07, 2025 09:41 AM

Google News

ADDED : ஆக 07, 2025 09:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொட்டபல்லாபூர் : பிரசவத்துக்கு வந்த இளம்பெண்ணும், குழந்தையும் உயிரிழந்தனர். இதற்கு டாக்டர்களின் அலட்சியமே காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகாவின், சிங்கேனஹள்ளியில் வசித்தவர் சுஷ்மிதா, 24. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரை, நேற்று முன்தினம் மருத்துவ பரிசோதனைக்காக, குடும்பத்தினர் தொட்டபல்லாபூர் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள், 'நாளை (இன்று) வாருங்கள். பிரசவம் பார்க்கிறோம்' என கூறினர். அதன்படி குடும்பத்தினர், நேற்று காலை சுஷ்மிதாவை மருத்துவமனையில் சேர்த்தனர். சேர்த்த சிறிது நேரத்தில் குழந்தை பிறக்காமலேயே அவரும், குழந்தையும் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். தாய், சேய் இறப்புக்கு டாக்டர்களின் அலட்சியமே காரணம் என, குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

'மகளுக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை. டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குடும்பத்தினர் தொட்டபல்லாபூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us