sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 காங்., - எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பியின் மேலும் ரூ.177 கோடி சொத்து முடக்கம் 

/

 காங்., - எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பியின் மேலும் ரூ.177 கோடி சொத்து முடக்கம் 

 காங்., - எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பியின் மேலும் ரூ.177 கோடி சொத்து முடக்கம் 

 காங்., - எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பியின் மேலும் ரூ.177 கோடி சொத்து முடக்கம் 


ADDED : ஜன 30, 2026 06:35 AM

Google News

ADDED : ஜன 30, 2026 06:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பிக்கு சொந்தமான மேலும் 177 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை, ஈ.டி., முடக்கி உள்ளது.

சித்ரதுர்கா காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பி, 50. சட்டவிரோதமாக ஆன்லைன் - ஆப்லைன் சூதாட்டம் நடத்திய இவர், சூதாட்டம் மூலம் கிடைத்த பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்த வழக்கில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி ஈ.டி., எனும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

நான்கு மாதங்களுக்கு பின், கடந்த மாதம் 30ம் தேதி அவருக்கு ஜாமின் கிடைத்தது. இதற்கிடையில் வீரேந்திர பப்பிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய ஈ.டி., 100 கோடி ரூபாய்க்கு மேலான தங்க கட்டிகள், நகைகள், விலை உயர்ந்த கார்களை பறிமுதல் செய்தது. குறுகிய காலத்தில் 2,300 கோடி ரூபாய் சம்பாதித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், வீரேந்திர பப்பிக்கு சொந்தமான 177 கோடி ரூபாய் மதிப்பிலான, அசையும், அசையா சொத்துகளை முடக்கியதாக, ஈ,டி., நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. ஏற்கனவே 143 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை, ஈ.டி., முடக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us