sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

கமிஷனில் இயங்கும் காங்., அரசு பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தாக்கு

/

கமிஷனில் இயங்கும் காங்., அரசு பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தாக்கு

கமிஷனில் இயங்கும் காங்., அரசு பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தாக்கு

கமிஷனில் இயங்கும் காங்., அரசு பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தாக்கு


ADDED : ஜூன் 25, 2025 08:55 AM

Google News

ADDED : ஜூன் 25, 2025 08:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : ''கர்நாடகாவில் கமிஷன் மூலம் காங்கிரஸ் அரசு இயங்கி வருகிறது. இது தெரிந்தும் கண்தெரியாதவர் போன்று முதல்வர் சித்தராமையா நடந்து கொள்கிறார்,'' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

காங்கிரஸ் அரசில் ஊழல் பெருகி வருகிறது. முதல்வராக தொடர, சித்தராமையா தகுதியற்றவர். எனவே, அவர் பதவி விலக வேண்டும். காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மிகவும் விரக்தியில் உள்ளனர்.

அரசு உயிருடன் உள்ளதா, இல்லையா என்று தெரியவில்லை. லஞ்சம் கொடுக்காமல் எந்த பணியும் நடக்கவில்லை. கமிஷன் மாபியாவால், நிர்வாகம் நடக்கிறது. இந்த கமிஷன் முகவர்களை, சித்தராமையாவே நியமித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் சாதனையை முறியடிக்க, முதல்வர் நாற்காலியில் சித்தராமையா ஒட்டிக் கொண்டுள்ளார். தன் கட்டுப்பாட்டில் இருந்த அரசு நிர்வாகத்தை முதல்வர் இழந்துவிட்டார். முதல்வரே ஊழலுக்கு துணை போகிறார்.

அமைச்சர்களுக்கும், ஊழலுக்கு எதிராக தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். அமைச்சர் பதவி விலக வேண்டும். இல்லையெனில், கவர்னர் தலையிட வேண்டும்.

எம்.எல்.ஏ., பி.ஆர்.பாட்டீல், ராஜு காகே, பேலுார் கோபாலகிருஷ்ணா எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார்?

இவ்வாறு அவர் கூறினார்.

காங்., - ஊழல் ஒன்றே!

காங்கிரஸ், ஊழல் இரண்டும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். ஊழல் இல்லாமல் காங்கிரஸ் இல்லை; காங்கிரஸ் இல்லாமல் ஊழல் இல்லை. உள்ளங்கையில் உள்ள காயத்தை பார்க்க, கண்ணாடி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதுபோன்று காங்கிரசின் ஊழலை பார்க்க, நாம் ஸ்கேன் செய்ய வேண்டியதில்லை; அதை கண்களால் பார்க்கலாம்.

- சி.டி.ரவி,

எம்.எல்.சி., - பா.ஜ.,

**






      Dinamalar
      Follow us