ADDED : ஏப் 04, 2026 04:41 AM
மிக்ஸியில் ஒரு தக்காளி, கொஞ்சம் புதினா இலை சேர்த்து விழுதாக அரைத்து, பஜ்ஜி மாவுடன் சேர்த்து பஜ்ஜி சுட்டால் சுவையாக இருக்கும்.
மோர் குழம்பு வைக்கும் போது, சிறிய நெல்லிக்காயை அரைத்து சேர்த்தால் சுவை கூடும்.
பருப்பு உருண்டை குழம்பு செய்யும் போது, பருப்புடன் ஒரு கைப்பிடி கொள்ளையும் சேர்த்து அரைத்தால், சுவையாக இருப்பதுடன், வாயு தொல்லையும் ஏற்படாது.
கேரட்டை வேக வைக்கும் தண்ணீரில், கொஞ்சம் சர்க்கரை சேர்த்தால் கேரட்டிற்கு தனி மனம் கிடைக்கும்.
எந்த ஊறுகாயாக இருந்தாலும், கடுகு எண்ணெய் ஊற்றிவிட்டால் எளிதில் கெட்டு போகாது.
பிரியாணி தயார் செய்யும் போது, எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து விட்டால், பிரியாணி அரிசி தனித்தனியாக பிரிந்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
ஆம்லெட் செய்யும் போது, சீஸ் உதிர்த்து சேர்த்து கொண்டால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
தக்காளி தொக்கு செய்யும் போது சிறிதளவு சிக்கன், 65 மசாலா சேர்த்தால் சுவை துாக்கலாக இருக்கும்.
கொத்தமல்லி துவையல் அரைக்கும் போது, தயிர் சேர்த்து அரைத்தால் சுவை அதிகரிக்கும்.

