sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

ஓய்வு பெறும் நாளில் கைதான லஞ்ச அதிகாரி

/

ஓய்வு பெறும் நாளில் கைதான லஞ்ச அதிகாரி

ஓய்வு பெறும் நாளில் கைதான லஞ்ச அதிகாரி

ஓய்வு பெறும் நாளில் கைதான லஞ்ச அதிகாரி


ADDED : ஏப் 10, 2025 05:05 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 05:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷிவமொக்கா: 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட அதிகாரி ஒருவர், ஓய்வு பெறும் நாளன்றே லஞ்சத்துக்கு ஆசைப்பட்டு, லோக் ஆயுக்தாவிடம் சிக்கினார்.

ஷிவமொக்கா நகரின் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத் தலைவராக பணியாற்றியவர் கிருஷ்ணப்பா. இவர் நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவர், ஷிவமொக்கா மாநகராட்சி கமிஷனரிடம், பொறுப்பை மாற்றித் தர வேண்டி இருந்தது.

ஷிவமொக்கா நகரில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எல்.இ.டி., திரை பொருத்த ஒப்பந்தம் பெற்றிருந்த மும்பை நிறுவனத்துக்கு பில் தொகையை வழங்க கிருஷ்ணப்பா 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டிருந்தார்.

'பணம் கொடுக்காவிட்டால் மும்பை நிறுவனம் சரியாக பணியாற்றவில்லை' என, அறிக்கை தாக்கல் செய்யப் போவதாக கிருஷ்ணப்பா மிரட்டினார். அந்நிறுவனம் பணம் கொடுக்க சம்மதித்தது. இது தொடர்பாக லோக் ஆயுக்தாவில் புகார் அளித்தது.

பணியின் கடைசி நாளான நேற்று, கிருஷ்ணப்பா அலுவலகத்தில் நிறுவனத்தினர் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தனர்.

அப்போது அங்கு வந்த லோக் ஆயுக்தா போலீசார், கிருஷ்ணப்பாவை கையும், களவுமாக பிடித்தனர்.

பணத்தையும் கைப்பற்றினர். பணத்தாசையால் பணியில் இருந்து ஓய்வு பெறும் நாளன்றே, லோக் ஆயுக்தாவிடம் கிருஷ்ணப்பா சிக்கினார்.






      Dinamalar
      Follow us