ADDED : ஆக 26, 2026 02:57 AM
நேபாள கும்பல் கைது
பெங்களூரு கட்டிகெனஹள்ளியில் வசித்த சந்திரமவுலி என்பவரின் வீட்டில் ஒரு கிலோ தங்க நகைகளை திருடிய நேபாளத்தை சேர்ந்த நான்கு பேரை நேற்று எலஹங்கா போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 55 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மீட்கப்பட்டன. இதில், தொடர்புடையவர்கள் போலீசார் தேடுகின்றனர்.
ஏழைகளுக்கு உதவிய திருடன்
பெங்களூரு ஒயிட்பீல்ட்டில் தொடர்ந்து பல வீடுகளில் திருடி, திருடிய பொருட்களை விற்ற பணத்தில் நண்பர்களுக்கு விருந்து அளித்து, ஏழைகளுக்கு உதவிய திருடன் சிவராசன், 34, என்பவரை, பேகூர் போலீசார் கைது செய்தனர். அவனிடமிருந்து தங்கம், வெள்ளி உட்பட 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.
சூதாட்டம்: ஐவர் கைது
பெங்களூரில் மின்னணு சாதனங்களை பயன்படுத்தி சூதாட்டம் நடத்திய ஐந்து பேரை சி.சி.பி., போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 50 லட்சம் ரூபாய் மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்ததாக தெரிவித்தனர்.
