sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

போக்குவரத்து போலீஸ் பெயரில் ரூ.1.50 லட்சம் சைபர் மோசடி

/

போக்குவரத்து போலீஸ் பெயரில் ரூ.1.50 லட்சம் சைபர் மோசடி

போக்குவரத்து போலீஸ் பெயரில் ரூ.1.50 லட்சம் சைபர் மோசடி

போக்குவரத்து போலீஸ் பெயரில் ரூ.1.50 லட்சம் சைபர் மோசடி


ADDED : மே 07, 2025 08:51 AM

Google News

ADDED : மே 07, 2025 08:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூரு, கெங்கேரி புறநகர் பகுதியை சேர்ந்தவர் சிவானந்தசாமி, 58. இவருடைய தாய் கங்கம்மா, 80. தாயின் வங்கிக் கணக்கை தன் மொபைல் போன் எண்ணுடன் இணைத்திருந்தார். கடந்த மாதம் 9ம் தேதி, வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட 'வாட்ஸாப்' எண்ணிற்கு போக்குவரத்து போலீசார் பெயரில் குறுந்தகவல் வந்தது.

அதில், 'போக்குரவத்து விதிகளை மீறியதற்காக அபராத தொகையை செலுத்த வேண்டும். அதற்கு இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இல்லையெனில் நீங்கள் கைது செய்யப்படுவீர்' என, கூறப்பட்டிருந்தது.

போக்குவரத்து போலீசார் குறுந்தகவல் அனுப்பியதாக நம்பிய அவரும், அந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். அடுத்து சில நிமிடங்களில் அவரது மொபைல் போன், 'ஹேக்' செய்யப்பட்டுள்ளது.

இதை அறியாத அவர், மொபைல் போன் வேலை செய்யவில்லை என நினைத்துள்ளார். சில நிமிடங்களுக்கு பின் மீண்டும் மொபைல் போன் இயங்க துவங்கியது. பின், அவரது தாய் வங்கிக் கணக்கில் இருந்து, 1.50 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டதாக வங்கியில் இருந்து குறுந்தகவல் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சிவானந்தசாமி, கெங்கேரி போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தார். இச்சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுகுறித்து சைபர் நிபுணர்கள் கூறியதவாது:

மொபைல் போனில், 'பிளே ஸ்டோர், ஆப் ஸ்டோர்' தவிர வேறு எந்த தளங்களில் இருந்தும் செயலிகளை பதிவிறக்கம் செய்ய கூடாது. 'ஆன்டி வைரஸ்' செயலிகளை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இது தரவுகளை பாதுகாப்பாக வைத்திருக்கும். அடையாம் தெரியாத நபர்கள் மட்டுமின்றி, தெரிந்தவர்கள் அனுப்பும் செயலிகளை கூட பதிவிறக்கம் செய்ய வேண்டாம். போக்குவரத்து போலீசார் அபராதம் தொடர்பாக எந்த தகவல்களையும், 'வாட்ஸாப்' மூலமாக அனுப்ப மாட்டார்கள்.

அபராத தொகையை போலீஸ் நிலையத்திலோ அல்லது அதிகாரப்பூர்வ வலைதளத்திலோ தான் கட்ட முடியும். மாறாக, எந்த செயலிகள் மூலமும் கட்ட முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us