sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

தர்ஷன் சிறை மாற்றம்? 23ல் விசாரணை

/

தர்ஷன் சிறை மாற்றம்? 23ல் விசாரணை

தர்ஷன் சிறை மாற்றம்? 23ல் விசாரணை

தர்ஷன் சிறை மாற்றம்? 23ல் விசாரணை


ADDED : ஆக 18, 2025 11:26 PM

Google News

ADDED : ஆக 18, 2025 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் தர்ஷனை, பல்லாரி சிறைக்கு மாற்றக்கோரும் மனு மீதான விசாரணை, வரும் 23ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உட்பட ஏழு பேர் ஜாமினில் இருந்தனர். கடந்த வாரம், இவர்களின் ஜாமினை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து ஏழு பேரும் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், அரசு தரப்பு சிறப்பு வக்கீல் பிரசன்ன குமார், 57வது செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

கொலை குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள தர்ஷன், பவித்ரா கவுடா உட்பட ஏழு பேர், ஜாமின் பெறுவதற்கு முன்பு, மாநிலத்தின் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். தற்போது ஜாமின் ரத்தாகி உள்ளதால், ஏழு பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

எனவே, ஜாமின் பெறுதற்கு முன், பல்லாரி சிறையில் தர்ஷன்; ஷிவமொக்கா சிறையில் ஜெகதீஷ், லட்சுமண்; கலபுரகி சிறையில் நாகராஜ்; பெலகாவி சிறையில் பிரதோஷ்; பெங்களூரு சிறையில் பவித்ரா கவுடா, அனுகுமார் ஆகியோர் அடைக்கப்பட்டிருந்தனர்.

பாதுகாப்பு மற்றும் நிர்வாக வசதிக்காக, அவர்களை மீண்டும் அந்தந்த சிறைக்கே அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

இம்மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இம்மனு குறித்து பதில் மனுத் தாக்கல் செய்வதற்காக தர்ஷன் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.






      Dinamalar
      Follow us