sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

2 முறை போலீசார் 'சம்மன்' ஆஜராகாத தர்ஷன் மனைவி

/

2 முறை போலீசார் 'சம்மன்' ஆஜராகாத தர்ஷன் மனைவி

2 முறை போலீசார் 'சம்மன்' ஆஜராகாத தர்ஷன் மனைவி

2 முறை போலீசார் 'சம்மன்' ஆஜராகாத தர்ஷன் மனைவி


ADDED : செப் 15, 2025 07:55 AM

Google News

ADDED : செப் 15, 2025 07:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : தன்னை பற்றி சமூக வலைதளங்களில் ஆபாசமான கருத்து பதிவிட்ட வழக்கில், இரண்டு முறை போலீசார் சம்மன் அனுப்பியும், நடிகர் தர்ஷன் மனைவி விஜயலட்சுமி, விசாரணைக்கு ஆஜராகவில்லை.

சித்ரதுர்காவின் ரேணுகாசாமி, 33, கொலை வழக்கில் சிறையில் இருந்த நடிகர் தர்ஷன், ஜாமின் கிடைத்ததால் வெளியே வந்தார். அவரது ஜாமினை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததால், தற்போது மீண்டும் சிறையில் உள்ளார்.

தர்ஷனை சிறையில் இருந்து ஜாமினில் எடுக்க, அவரது மனைவி விஜயலட்சுமி முயற்சி மேற்கொண்டார். இதனால் அவரை சமூக வலைதளங்களில் சிலர் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும்படி, பெங்களூரு சி.கே.அச்சுக்கட்டு போலீசாருக்கு, மாநில மகளிர் ஆணையம் உத்தரவிட்டது.

இதன்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராகும்படி விஜயலட்சுமிக்கு, போலீசார் இரண்டு முறை சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனால், மேலும் ஒரு சம்மன் அனுப்ப போலீசார் தயாராகி வருகின்றனர்.

இம்முறையும் அவர் விசாரணைக்கு ஆஜராகாவிட்டால், நீதிமன்றத்தில் 'சி' அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். 'சி' அறிக்கை என்பது விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை அல்லது போதிய சாட்சி கிடைக்கவில்லை என்பது குறிக்கும்.






      Dinamalar
      Follow us