sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

பங்கார்பேட்டை தாலுகா ஆபீசில் உப லோக் ஆயுக்தா நீதிபதி ஆய்வு

/

பங்கார்பேட்டை தாலுகா ஆபீசில் உப லோக் ஆயுக்தா நீதிபதி ஆய்வு

பங்கார்பேட்டை தாலுகா ஆபீசில் உப லோக் ஆயுக்தா நீதிபதி ஆய்வு

பங்கார்பேட்டை தாலுகா ஆபீசில் உப லோக் ஆயுக்தா நீதிபதி ஆய்வு


ADDED : ஜூன் 05, 2025 11:36 PM

Google News

ADDED : ஜூன் 05, 2025 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பங்கார்பேட்டை: பங்கார்பேட்டை தாலுகா அலுவலகம், டவுன் சபை, அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் உப லோக் ஆயுக்தா நீதிபதி வீரப்பா நேற்று திடீர் சோதனை நடத்தினார்.

அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் குறைகளை அவர் கேட்டார்.

பங்கார்பேட்டை டவுன் சபையில் அதிகாரிகள், ஊழியர்கள் ஆஜர் பதிவு புத்தகத்தையும், வரி வசூல் விபரங்களை கேட்டார்.

“தாலுகா அலுவலகத்தில் நிலுவையில் உள்ள கோப்புகள் எவ்வளவு; எத்தனை ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, தாசில்தார் வெங்கடேசப்பா பதில் அளிக்க தவறியதால் அனைத்து கோப்புகளையும் ஆய்வு செய்ய லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

“ஒரு கோப்பு கூட நிலுவையில் இல்லை என்கிறீர்களா. அப்படியானால் மாநிலத்தில் பங்கார்பேட்டை தான் நிலுவையே இல்லாத டவுன் சபை என்று அறிவிக்க வேண்டுமா?” என கேட்டு, வருவாய்த்துறையினரை மிரள வைத்தார்.

அதிகாரிகள், ஊழியர்கள் ஆஜர் பதிவு புத்தகத்தில் குளறுபடி உள்ளதை சுட்டிக் காட்டி விளக்கம் கேட்டார். இதனால் தாலுகா அலுவலகமே மிரண்டது.

“கேட்கப்படும் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்க தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் பொறுபற்று செயல்பட கூடாது. பொதுமக்களை ஏமாற்றக்கூடாது,” என, உப லோக் ஆயுக்தா நீதிபதி எச்சரித்தார்.






      Dinamalar
      Follow us