/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நால்வடி கிருஷ்ண ராஜ உடையார் சிலைக்கு அவமதிப்பு
/
நால்வடி கிருஷ்ண ராஜ உடையார் சிலைக்கு அவமதிப்பு
ADDED : மே 30, 2025 11:30 PM

மைசூரு:மைசூரின் கே.ஆர். சதுக்கத்தில் உள்ள, கிருஷ்ணராஜ உடையாரின் சிலைக்கு, அடையாளம் தெரியாத நபர், அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மைசூரு நகரின் இருதய பகுதியில் உள்ள, கே.ஆர். சதுக்கம் பிரபலமான பகுதியாகும். எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்த சதுக்கத்தில் மைசூரு மஹாராஜா நால்வடி கிருஷ்ணராஜ உடையாரின் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.
நேற்று மாலை 6:00 மணியளவில், அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர், கே.ஆர்.சதுக்கத்தில் உள்ள நால்வடி கிருஷ்ண ராஜ உடையாரின் உருவச்சிலையின் வாயில் பீடி வைத்து அவமதித்தார். அது மட்டுமின்றி, உருவச்சிலையின் தலை மீது அமர்ந்து, சேதப்படுத்தவும் முயற்சித்தார். சிலர் இதை கண்டு, பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆதர்ஷ் என்ற இளைஞர், கிருஷ்ண ராஜ உடையாரின் உருவச்சிலை மீது அமர்ந்திருந்த நபரை, கீழே இறக்க முயற்சித்தார். சிலர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு வருவதற்குள், அந்நபர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார்.
மஹாராஜாவின் உருவச்சிலையை அடையாளம் தெரியாத நபர் அவமதித்ததற்கு மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சிலையை அவமதித்த நபரை கண்டுபிடித்து, தண்டிக்க வேண்டும் என, வலியுறுத்துகின்றனர்.