/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வரதட்சணை கொடுமை புதுப்பெண் தற்கொலை: கணவர் வீட்டிற்கு உடலை எடுத்து சென்றதால் பரபரப்பு
/
வரதட்சணை கொடுமை புதுப்பெண் தற்கொலை: கணவர் வீட்டிற்கு உடலை எடுத்து சென்றதால் பரபரப்பு
வரதட்சணை கொடுமை புதுப்பெண் தற்கொலை: கணவர் வீட்டிற்கு உடலை எடுத்து சென்றதால் பரபரப்பு
வரதட்சணை கொடுமை புதுப்பெண் தற்கொலை: கணவர் வீட்டிற்கு உடலை எடுத்து சென்றதால் பரபரப்பு
ADDED : டிச 27, 2025 06:32 AM

வித்யரண்யபுரா: பெங்களூரில் வரதட்சணை கொடுமையால், புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கணவர் வீட்டிற்கு எடுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு ராமமூர்த்திநகரை சேர்ந்தவர் கனவி, 26. இவருக்கும், வித்யரண்யபுராவின் சூரஜ், 28, என்பவருக்கும், கடந்த அக்டோபர், 29ம் தேதி திருமணம் நடந்தது. நவம்பர், 29ல் அரண்மனை மைதானத்தில் பிரமாண்டமாக திருமண வரவேற்பும் நடந்தது. கடந்த, 15ம் தேதி கனவியும், சூரஜும், தேனிலவுக்காக, 10 நாட்கள் இலங்கை சென்றனர். ஆனால், ஐந்து நாட்களிலேயே திரும்பி வந்தனர்.
கணவருடன் ஏற்பட்ட சண்டையால், கடந்த, 22ம் தேதி கனவியை, அவரது பெற்றோர் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். மறுநாள் தங்கள் வீட்டில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். கனவியை மீட்ட பெற்றோர், தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரது உடல் நிலை மோசம் அடைந்ததால், ஐ.சி.யு.,வில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கோமாவுக்கு சென்ற அவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார். பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, கனவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
வாக்குவாதம் உடலை ராமமூர்த்தி நகருக்கு எடுத்து செல்லாமல், கணவர் வீடு இருக்கும் வித்யரண்யபுராவுக்கு எடுத்து சென்ற கனவியின் உறவினர்கள், ஆம்புலன்ஸ் முன் பேரணியாக சென்று, நியாயம் வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
சூரஜ் வீட்டை நெருங்கியதும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், ஆம்புலன்சை தடுத்து நிறுத்தினர். கோபம் அடைந்த கனவியின் உறவினர்கள், போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர்.
அவர்களை சமாதானப்படுத்தி போலீசார் அங்கிருந்து அனுப்பினர்.தலைமறைவாக உள்ள சூரஜ் குடும்பத்தினரை தேடுகின்றனர்.

