sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 ரூ.1.50 கோடி போதைப்பொருள் பறிமுதல்; நைஜீரியா பெண் உட்பட 3 பேர் கைது

/

 ரூ.1.50 கோடி போதைப்பொருள் பறிமுதல்; நைஜீரியா பெண் உட்பட 3 பேர் கைது

 ரூ.1.50 கோடி போதைப்பொருள் பறிமுதல்; நைஜீரியா பெண் உட்பட 3 பேர் கைது

 ரூ.1.50 கோடி போதைப்பொருள் பறிமுதல்; நைஜீரியா பெண் உட்பட 3 பேர் கைது


ADDED : டிச 24, 2025 07:25 AM

Google News

ADDED : டிச 24, 2025 07:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூரில் இரு வழக்குகளில், 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. நைஜீரியா பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு வர்த்துாரில், வாடகை வீட்டில் வசிக்கும் நைஜீரியா பெண் ஒருவர், போதை பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக, சி.சி.பி., போதை பொருள் தடுப்பு குழுவுக்கு தகவல் கிடைத்தது. அந்த பெண்ணின் நடவடிக்கைகளை கண்காணித்தனர்.

மும்பையில் இருந்து பெங்களூருக்கு நேற்று முன்தினம் ஆம்னி பஸ்சில் வந்தார். அவரை பஸ் நிலையத்தில் கைது செய்த போலீசார், அவரது உடமைகளை சோதனை செய்தனர். 'பிரட்' பாக்கெட்டிற்குள், பிரட்டுகளுக்கு நடுவில் மறைத்து, 121 கிராம் எடையுள்ள 1.20 கோடி ரூபாய் மதிப்பிலான கோகைன் கடத்தியது தெரிய வந்தது. உடன் அவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் அவரது பெயர் ஒலஜிட் எஸ்தர், 34 என்பதும், கடந்த ஆண்டு கல்வி விசாவில் இந்தியா வந்தவர், மும்பையில் தங்கி இருந்தார். கல்லுாரியில் சேராமல், மும்பையில் வசிக்கும் தன் நைஜீரிய ஆண் நண்பர் கூறியபடி, போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டார். பின், பெங்களூரு வந்த அவர், வர்த்துாரில் தங்கி இருந்து போதை விற்பனையில் ஈடுபட்டதும், புத்தாண்டு அன்று விற்க மும்பையில் இருந்து கோகைன் வாங்கி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

இதுபோல, ஜாலஹள்ளி காலிங்கராவ் சதுக்கம் பகுதியில் உயர் ரக கஞ்சா விற்பனை செய்த கேரளாவின் நிஜில் ராஜ், 27, மெல்வின், 30 ஆகியோரை, ஜாலஹள்ளி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான 247 கிராம் உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இரு வழக்கிலும் சேர்த்து, 1.46 கோடி ரூபாய் மதிப்பிலான கோகைன், உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us