ADDED : ஆக 15, 2026 04:53 AM

அ நிறம் | அளவு
பெங்களூரு: தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்த தம்பதி சுமந்த் ஜெயின், 32, பத்மாவதி, 29. இவர்கள் இருவரும், பெங்களூரு ராஜகோபால்நகர் ராஜேஸ்வரி நகரில் வசித்தனர்.
சுமந்த் சிவில் இன்ஜினியர்; பத்மாவதி ஐ.டி., நிறுவனத்திலும் வேலை செய்தனர். நேற்று இரவு தம்பதிக்கு இடையே் குடும்ப தகராறு ஏற்பட்டது. கோபம் அடைந்த கணவர், மனைவியை கழுத்தை நெரித்து கொன்றார். பின், தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முன்னதாக, வாட்ஸாப்பில் தனது தாய்க்கு ஆடியோ மெசேஜ் அனுப்பிய சுமந்த், தனது பெயரில் உள்ள பி.எப்., பணம், வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து கொள்ளும்படி கூறியுள்ளார்.
