sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 பிரபல ரவுடி 'ஆட்டோ' நாகா பண்ணை வீட்டில் படுகொலை

/

 பிரபல ரவுடி 'ஆட்டோ' நாகா பண்ணை வீட்டில் படுகொலை

 பிரபல ரவுடி 'ஆட்டோ' நாகா பண்ணை வீட்டில் படுகொலை

 பிரபல ரவுடி 'ஆட்டோ' நாகா பண்ணை வீட்டில் படுகொலை


ADDED : ஜன 26, 2026 05:18 AM

Google News

ADDED : ஜன 26, 2026 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெலமங்களா: பெங்களூரின், லக்கரே மற்றும் ஹுலியூரு துர்கா போலீஸ் நிலையங்களில் ரவுடி பட்டியலில் இருந்தவர் ரவுடி 'ஆட்டோ' நாகா. இவர் மீது, பல்வேறு கிரிமினல் வழக்குகள் பதிவாகியுள்ளன.

பெங்களூரு ரூரல் மாவட்டம், நெலமங்களா தாலுகா அருகில் உள்ள பாலாஜி பண்ணை வீட்டில், ரவுடி நாகா தங்கியிருந்தார்.

நேற்று மதியம் இவர் இருந்த அறைக்குள் நுழைந்த மர்ம கும்பல், அரிவாள், இரும்புத்தடியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியோடியது.

தகவலறிந்து அங்கு சென்ற மாதநாயகனஹள்ளி போலீசார், ரவுடியின் உடலை மீட்டனர். கொலைக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. முன் விரோதம் காரணமாக இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். விசாரணையை துவக்கியுள்ளனர்.

சம்பவ இடத்தின் சுற்றுப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை, ஆய்வு செய்கின்றனர்.






      Dinamalar
      Follow us